தூத்துக்குடி, ஆக. 23 தூத்துக்குடியில் நடைபெற்ற தொழிற் கடன் வழங்கும் விழாவில், பயனாளிக ளுக்கு ரூ.315 கோடி மதிப்பிலான கடனுத விகளை கனிமொழி எம்.பி., வழங்கினார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் புதன்கிழமை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது, நாட்டின் பொருளாதாரம் 35 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில் களை சார்ந்துதான் இருக்கிறது. அதுமட்டு மல்லாமல் ஏற்றுமதியில் 45 சதவீதம் சிறு. குறு, நடுத்தர தொழில்களின் பங்கு உள்ளது.
திருப்பூர் மாவட்டம் ரூ.400 கோடி அளவிற்கு கடன் வழங்கியிருக்கிறது. நாம் தற்போது ரூ.315 கோடி மதிப்பில் கடனுதவியினை இன்று வழங்குகின்றோம். எனவே நம்முடைய அடுத்த இலக்கு ரூ.500 கோடியாக இருக்க வேண்டும். நாம் கடன் வாங்கி இன்னும் தொழிலை விரிவுபடுத்த வேண்டுமென்றால் இப்போது வாங்கிய கடனை சரியாக கட்ட வேண்டும். நீங்கள் சரியாக கடனை திருப்பி செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் உங்களுக்கு கடன் வழங்கியுள்ளார்கள். சிறப்பானதாக, தனித்துவமாக நாம் உருவாக்கும் பொருட்கள் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாற முடியும். நமது மாவட்டத்தை எல்லோரும் திரும்பி பார்க்கும் மாவட்டமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றக்கூடிய திறமை உங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி த.துரைராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.