districts

img

வன்கொடுமையால் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி

இராமநாதபுரம், மே 31-  பரமக்குடியில் வன்கொடுமையால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு  அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் புதன்கிழமையன்று வழங்கினார்.   இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், எமனேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிடும் வகையில் அவரது மனைவி விசித்ராவிடம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்தின் ரூ.6  லட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் அலுவலகத்தில் மே 31 புதன்கிழமை வழங்கி னார்.  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு  வழங்கும் நலத்திட்ட உதவிகள் முழுமை யாக பெற்றுத் தரப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். கனகராஜ் குடும்பத்திற்கு பாதுகாப்பு  மற்றும் நிவாரணம் வழங்கக்கோரி தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தியதுடன், மாவட்ட ஆட்சி யர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அக்குடும்பத்தினருடன் சென்று மனு அளித்து வலியுறுத்தியது. இந்நிலையில் கனகராஜ் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

;