districts

img

சாலை பணியாளர்கள் சங்க விருதுநகர் மாநாடு

திருவில்லிபுத்தூர், ஜூலை 30-  தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியா ளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட எட்டாவது மாநாடு திருவில்லிபுத்தூரில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் குமார் பாண்டி தலைமை தாங்கினார் .கோபால் ,தேவராஜ் முன்  னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப் பையா துவக்கி வைத்துப் பேசினார்.  மாவட்டச் செயலாளர் முருகன் செந்தில்வேல், மாவட்ட பொருளாளர் திருப்  பதி ராஜ் ஆகியோர் அறிக் கைகளை சமர்ப்பித்தனர். தோழமைச்சங்க நிர்வாகி கள் முருகானந்தம், ராமச் சந்திரன், போத்திராஜ், ராஜ குரு, மணிமாலா பாண்டி யன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொருளா ளர் தமிழ் நிறைவுரையாற்றி னார். சாலைப் பணியா ளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக  அறிவிக்க வேண்டும் சாலை  பணியாளர்களுக்கு ஊதி யத்தில் 10 சதவீத ஆபத் துப்படி வழங்க வேண்டும். நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்து போன சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்ட னர் மாவட்ட தலைவராக என். குமார் பாண்டி மாவட்ட செயலாளராக எம் .முரு கன் செந்தில் வேல் , பொரு ளாளராக திருப்பதி ராஜ் ,  துணைத் தலைவராக கோபால், இணை செயலா ளராக தேவராஜ் மாநில செயற்குழு உறுப்பினராக முருகன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர் .முன்னதாக சாலை பணியா ளர்களின் பேரணி நடை பெற்றது.