சிபிஎம் புதிய கிளை அமைப்பு
வெம்பக்கோட்டை, மே 14- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் எம்,துரைச்சாமிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைச் செயலாளராக தர்மலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியகுழு உறுப்பினர் பால்சாமி ஆகியோர் கலந்து கொண்டு விளக்கிப் பேசினர்.
கண்மாயில் மூழ்கி மாணவன் பலி
திருச்சுழி, மே 14- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே புங்கமரத்துப் பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் சுபப்பிரியன் (14). இவர் சூரப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி யில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளார், ஆழமான பகுதிக்கு சென்றதால் மூச்சுத் திணறி உயிரிழந்தார், இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
பெரியகுளம் அருகே சாலைப்பணியாளர் மர்ம சாவு
தேனி, மே 14- பெரியகுளம் அருகே சாலைப்பணியாளர் மர்மமாக இறந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி யை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 39). இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில் அபிநயா என்பவரை 2 ஆவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகன் உள்ளான். இந்த நிலை யில் அபிநயா தனது குழந்தையுடன் மயிலாடும்பாறை யில் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டார். இந்நிலை யில் சரவணக்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அங்கு சரவணக்குமார் சேரில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தென்கரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சரவணக்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இறப்பு குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மே 16 இல் பெரியகுளம் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தேனி, மே 14- பெரியகுளம் வருவாய் கோட்ட அளவிலான மே-2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் வருகிற 16 ஆம் தேதி நடைபெறும் என கோட் டாட்சியர் பொறுப்பு முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களால் மே 16 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே, பெரியகுளம் கோட்டத்திற்குட்பட்ட விவசாயி கள், விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
ஆண்டிபட்டி அருகே சுற்றுலா வேன் மோதி கட்டிட தொழிலாளி பலி
தேனி, மே 14- ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பலியானார். மதுரை மாவட்டம், வாலாந்தூர் அருகே பெரிய குறவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி யின் மகன் அஜித்குமார் (24). இவர் கட்டிடத்தொழிலாளி. அஜித்குமாரின் மனைவி பிரசவத்திற்காக கோம்பையில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அஜித்குமார் தனது குழந்தையை பார்ப்ப தற்காக சனிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் தேனி-மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டூரிஸ்ட் வேன் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி யது. இதில் அஜீத்குமார் தலையில் பலத்த காயம டைந்து மயக்கம் அடைந்தார். அவரை தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்த னர். சிகிச்சையில் இருந்த அஜித்குமார் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை
மதுரை, மே 14- மதுரை தெற்கு வாசல் பகுதியில் ஞாயிறன்று பட்டப்பக லில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் 1 ஆவது தெருவை சேர்ந்தவர் விஜய ராஜன் மகன் ஆனந்த குமார்(22) .இவர் மீனாட்சி தியேட்டர் அருகே உள்ள அவரது பாட்டியை பார்க்க ஞாயிறன்று காலை வந்துள்ளார் .அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்த குமாரை அரி வாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். கொலையாளிகள் தப்பி ஓடி தலை மறைவாகினர். சம்பவ இடத்திற்கு வந்த தெற்குவாசல் காவல்துறை யினர் வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கொலை யாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கம்பம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 8 பெண் தொழிலாளர்கள் காயம்
தேனி, மே 14- கம்பம் அருகே புதுப் பட்டியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பய ணம் செய்த 8 பெண் தொழி லாளர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனி மாவட்டம், கம்பம் அருகே க.புதுப்பட்டி வடக்கு காலனியை சேர்ந்த ஜமுனா ராணி, லதா, பாண்டியம் மாள், சாந்தி, வள்ளியம்மாள் உள்ளிட்ட 8 பேர் கூடலூரில் உள்ள தனியார் தோட்டத் தில் கூலி வேலைக்கு சென்று விட்டு ஆட்டோவில் கம்பம் புதுப்பட்டி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். க.புதுப்பட்டி தனியார் பள்ளி அருகே வந்த போது, நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது .இதில் ஜமுனா ராணி உட்பட 8 பேர் படுகாய மடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .விபத்து குறித்து பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகள் சங்கத்தின் முயற்சியால் நடவடிக்கை இலவம் பஞ்சு விலை நிர்ணயம் தொடர்பாக நாளை முத்தரப்பு கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடமலைக்குண்டு, மே 14- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவு விலை மிக குறைவாக காணப்படு கிறது. தற்போது 55 ரூபாய் வரை மட்டுமே இல வம் பஞ்சு விற்பனையாகிறது. இதனால் விவசாயி களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் இலவம் பஞ்சு காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ள னர். இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், தேனி மாவட்ட செயலா ளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் வருசநாடு கிராமத்தில் விவசாயிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இலவம் பஞ்சுக்கு கிலோ 110 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் வரு கின்ற 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உத்தம பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு இலவம் பஞ்சு விலை நிர்ணயம் தொடர்பாக முத்தரப்பு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். இத னால் கடமலை-மயிலை ஒன்றிய இலவம் பஞ்சு விவ சாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பேச்சு வார்த்தையில் விவசாயிகளுக்கு லாபம் ஏற்படும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளுக்காக தொடர்ந்து ஆதரவளித்து வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஆர்.டி.ஓ தலைமையில் நடைபெறும் முத்தரப்பு கூட்டத்தில் இலவம் பஞ்சு மட்டுமல்லாமல் கொட்டை முந்திரியின் விலையையும் நிர்ணயம் செய்ய வலியுறுத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயி கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் முத்த ரப்பு கூட்டத்தில் அதிக அளவிலான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து சென்னை பள்ளி மாணவி பலி
தேனி, மே 14- கம்பம் அருகே சுருளி அருவியில் மரக் கிளை முறிந்து சென்னையை சேர்ந்த பள்ளி மாணவியின் தலையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் வெளி மாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து செல் கின்றனர். தற்பொழுது கோடை கால விடு முறை தொடங்கியுள்ளதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னை - நீலாங்கரை ஈஸ்வரி நகரைச் சேர்ந்த நிக்ஸன் தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் பெமினா (வயது-15 ) மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிறன்று சுருளி அருவிக்கு வந்துள் ளார். அருவியில் குடும்பத்தினர் மற்றும் உற வினர்களுடன் மகிழ்ச்சியாக குளித்துவிட்டு பின்னர் சொந்த ஊர் திரும்புவதற்காக அருவி சாலையில் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போது வென்னி யாறு பாலத்தின் அருகே இருந்த பழைய மரத்தின் மரக்கிளை ஒன்று எதிர்பாராத விதமாக முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது. பலத்தக் காயம் அடைந்த பெமினா விற்கு மூக்கு மற்றும் வாய் பகுதியில் ரத் தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பலி யானார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனத்துறையினர் பெமினாவின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத் தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ராயப் பன்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கில் வந்தவர் சாலையோர தடுப்பில் மோதி பலி
நத்தம், மே 14- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமராஜன் (வயது 32). சென்னையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த இவர் சடையம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டி ருந்தார்.அப்போது சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ராமராஜன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் சார்பு ஆய்வா ளர் விஜயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன ராமராஜனுக்கு சினேகா என்ற மனைவியும், வர்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
குமரியில் கோடை விடுமுறையை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்
நாகர்கோவில், மே 14 கோடை விடுமுறையை என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் கன்னியா குமரிக்கு குடும்பமாக வந்து கொண்டிருக்கி றார்கள். அதிலும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படு கிறது. அதிகாலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரியன் மறையும் நிகழ்வை ஏராள மானோர் பார்த்து ரசிக்கின்றனர். இங்கு உள்ள பக வதி அம்மன் கோயில் மற்றும் அலங்கார மாதா கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு காலை 8 மணியிலி ருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று பார்வையிட்டனர். மேலும் மாலை வேளை யில் இதமான குளிர் காற்று வீசுவதால் கோடை வெப்பத்தை தணிக்க அதிகமானோர் வருகின்ற னர். ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக உள்ள தால் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அலங்காநல்லூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
மதுரை, மே 13- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீபால மரத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலா ளர்கள் பரந்தாமன், தன்ராஜ் ஆகியோர் போட்டி யைத் துவக்கி வைத்தனர். சிறிய மாட்டில் 19 ஜோடிகள், பெரிய மாட்டில் 12 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாட்டில் முதல் பரிசு ரூ.25 ஆயிரத்தை சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலை வர் ஜெயபாலகிருஷ்ணன் சிறிய மாட்டில் ஒது சுற்றில் முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை அரும்ப னூர், கள்ளந்திரி மாடுகள் இணைந்து பெற்றன. மற்றொரு சுற்றில் முதல் பரிசை தேனி மாவட்டம் சிறைப்பாறை வெண்டி முத்தையா மாடும், இரண்டாம் பரிசை கல்லணை விஷ்வா ரவிச்சந்திரன் மாடும் பெற்றது. விழா ஏற்பாடு களை அ.புதுப்பட்டி கிராம மரியாதைகாரர்கள், கிராம பொதுமக்கள், மாட்டு வண்டி பந்தயக் குழுவினர் செய்திருந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்திய விளை நிலங்களுக்கு சொற்ப இழப்பீடு
பாதரக்குடி கிராம மக்கள் அதிருப்தி
சிவகங்கை, மே 12- விவசாயிகளின் நிலங்கள் நெடுஞ்சா லைத்துறைப் பணிகளுக்காக கையகப் படுத்தப்பட்டுள்ளது. நிலங்களை கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் வேணுகோபால், ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டி மீனாள் ஆகியோர் சிவகங்கை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மனுவில், “ காரைக்குடி வட்டம் கல் லல் ஒன்றியம் மானகிரி சுக்கானாந்தில் பாதரக்குடி கிராமம் வழியாக அமைய உள்ள தேசிய நெடுஞ்சாலைக்காக விவ சாயிகளின் நிலங்கள் கையகப்படுத் தப்பட்டன. நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியபோது, விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டு மென உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை இழப்பீட்டுத் தொகையை மதிப்பீடு செய்துள்ள விலை மற்றும் விகிதாச்சாரம் மக்களுக்கு புரியாத புதிதாக நெடுஞ் சாலை துறை வழங்கியுள்ள இழப்பீட்டு தொகையையும் சந்தையின் மதிப்பீட்டு விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மடு வுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசமாக உள்ளது. நஞ்சை நிலங்களுக்கு சுமார் ஒரு சென்ட் ரூ.1,500, புஞ்சை நிலங்களுக்கு ஒரு சென்ட் ரூ.3,000 என இழப்பீடு நிர்ணயம் செய்துள்ளனர். நெடுஞ்சாலை துறை இழப்பீடு கணக்கீடு மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழிக்குமுற்றிலும் முரணாக உள்ளதால் கிராம மக்கள் வேதனைய டைந்துள்ளனர். மீண்டும் போராட்டம் நடத்த வலியுறுத்துகின்றனர். மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பாதரக்குடி கிராம மக்களுக்கு தகுந்த இழப்பீடு கிடைக்க வழி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். பாதரக்குடியைச் சேர்ந்த ராசேந்திரன் தனது மனுவில், எனது இடத்தின் மதிப்பு ரூ. 4லட்சம். நெடுஞ்சாலைத்துறை எனது வங்கிக் கணக்கில் சிறு தொகையை செலுத்தியுள்ளது. சந்தை மதிப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இழப்பீடு வழங்குவது குறித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி யது தவறு என்ற மாவட்ட ஆட்சியரின் கூற்று சரியானதல்ல. மக்கள் பாதிக்கப்படும் போது மக்களுக்காக குரல் கொடுப்பது தானே கிராமசபைக் கூட்டம் என்ற கேள்வி யையும் முன்வைத்துள்ளனர் கிராம மக்கள்.