districts

img

கள்ளந்திரி பகுதியில் சரளைக்கற்களால் மட்டுமே போடப்பட்ட சாலை

மதுரை, ஏப்.19- கள்ளந்திரி ஊராட்சிக்கு உட்  பட்ட பகுதியில் சரளைக்கற் களால் மட்டுமே போடப்பட்ட சாலையால் மக்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இரண்டு  ஆண்டுகளாகியும் முடிவடை யாத சாலைப் பணி குறித்து ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ள னர். மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கள்ளந்திரி ஊராட்சிக்குட்பட்ட தொப்புலான் பட்டி முதல் அய்யனார் நகர் வரை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சிஜிஎப் 2019-2020 திட்டம் மூலம் சாலை அமைக்கும் பணி துவங்கி தற்போது இரண்டு ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்  னும் நிறைவடையவில்லை. இந்த சாலை சுமார் ரூ. 30 லட்சத்தில் 86 ஆயிரம் செலவில் அமைத்த தற்கான மதிப்பீடு பலகை வைக் கப்பட்டுள்ளது. தொப்புலான் பட்டி முதல் மயானம் ரோடு வரை  11 லட்சத்து 65 ஆயிரம் செலவில் 600 மீட்டர் சாலை பணி நிறை வடைந்தது போல மதீப்பீடு பலகை வைத்துள்ளனர். சாலை பணியினை துவக்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் சரளைக்கற்களை மட்டுமே பரப்பி விட்டதோடு இருப்பதால் இரு சக்கர வாக னத்தில் செல்வோர் நிலை தடு மாறி கீழே விழுகின்றனர். அந்த  பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட இரண்டு பேருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ள னர்.  இதுகுறித்து அந்த பகுதி மக் கள் கூறுகையில், சாலை அமைப்  பதாகக் கூறி மக்கள் வரி பணம் கையாடல் செய்யப்பட்டிருக்க லாம் என சந்தேகம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து கொண்டு விரைவில் சாலை போடும் பணியினை முடிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளனர்.            (ந.நி)