districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் அய்யப்பநாயக்கன்பட்டியில் சாலை அமைப்பு

மதுரை, ஜூன் 3-  அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நடத்தி போராட்டத்தால் அய்யப்ப நாயக்கன்பட்டியில் சாலை அமைக்கப்பட்டது.  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மன்னாடிமங்கலம் ஊராட்சி அய்யப்பநாயக்கன்பட்டி கிரா மத்தில் தேவர் காலனி, வி.பி.நகரில் உள்ள 3 தெருக்களில் சாக்கடை கட்டித் தர கோரியும், தெருக்களில் பேவர்பிளாக் சாலை அமைத்து தரக்கோரியும், மின்விளக்கு, குடி தண்ணீர் வசதி செய்து கொடுத்தி டக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் வாடிப்பட்டி ஒன்றி யக்குழு சார்பாக தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்பட்டது.  மே 4 அன்று அய்யப்பநாயக் கன்பட்டி புதுக்காலனியில் ஒன்றி யச் செயலாளர் ஏ.வேல்பாண்டி தலைமையில் மாநிலக் குழு  உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத் தாய் ஆகியோர் பங்கேற்பில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகினர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். பேச்சுவார்த்தையில், முதல் கட்டமாக 3 தெருக்களுக்கும் பேவர்பிளாக் அமைக்க ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதற்கான வேலைகளை உடனடி யாக துவங்குவதாகவும் உத்தர வாதம் அளித்தனர். அதனடிப்படை யில் வி.பி.நகரில் முதல் தெரு வில் ரூ.2லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள் ளது.