தேனி ,அக்.14- தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் திடீர் அனுமதி மறுத்ததால் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பெண்களை குண்டு கட்டாக கைது செய்த னர். தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் கடந்த ஆறு மாதங்களாக உணவு தயா ரிப்பு செலவினத்தொகை (காய்கறி, எரிபொருள், மசாலா பொருட்கள் வாங்கு வதற்கு) வழங்கவில்லை. அமைப்பாளர்கள் கடன் வாங்கி சத்துணவு மையங்க ளை நடத்தி வரும் அவல நிலையை போக்க வேண் டும். வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படும் சரியான அள விலும் பள்ளி வேலை நேரத்தி லும் விநியோகம் செய்திட வேண்டும். சத்துணவு ஊழி யர்களுக்கு வேலை நிறுத்த கால ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர் விரோத போக் கில் செயல்படும் உதவி கணக்கு அலுவலர் சென்னம ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையி னரிடம் அனுமதி கேட்கப் பட்டது. உதவி கணக்கு அலு வலரின் ஆதரவு அமைப்பி னர் இதற்கு எதிராக அதே இடத்தில், போராட அனு மதி கேட்டனர் .அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
சாலை மறியல்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அனுமதிக் கப்பட்ட 4 மணிக்கு ஆர்ப்பாட் டம் நடத்த திரண்டனர் .அங்கு வந்த காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி போராட் டத்திற்கு அனுமதி மறுப்ப தாக தெரிவித்தார். அப் போது சென்னமராஜ் ஆத ரவு தரப்பினர் சத்துணவு ஊழியர் சங்க கொடியை பயன்படுத்தி ஊர்வலமாக வந்தனர் அப்போது சங் கத்தின் பொதுச்செயலாளர் மலர்விழி, நாங்கள்தான் சத்துணவு ஊழியர் சங்கம், எங்களுக்கு தான் அரசு அங்கீகாரம் கொடுத் துள்ளது. எங்களின் கொடி யை வேறு நபர்கள் பயன் படுத்தக் கூடாது என்றார்.காவல்துறையினர் நீதி மன்றத்தை நாடும் படி கூறி, போராட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். இதனால் ஆவே சமடைந்த சத்துணவு ஊழி யர்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். அதனைத்தொடர்ந்து காவல்துறை துணைக் கண் காணிப்பாளர் பார்த்திபன், பெண் சத்துணவு ஊழியர்க ளிடம் இருந்த பேனரை பிடித்து இழுத்து வந்து கைது செய்யும் நடவடிக்கை யை துவங்கினார் .பின்னர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலா ளர் தாஜுதீன் ,உதவி செய லாளர் முத்தையா உள்ளிட்ட நிர்வாகிகள் சத்துணவு ஊழி யர் சங்க பொதுச்செயலாளர் மலர்விழி. மாநில செயலா ளர் பாண்டிச்செல்வி,மாநில துணைத் தலைவர் பேயத் தேவன் ,மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் பவானி, பொருளாளர் லட்சுமி உள்ளிட்ட 160 பேரை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் கைது செய்த னர்.
திண்டுக்கல்
அகவிலைப்படியுடன் கூடிய சட்ட பூர்வ பென்ச னாக ரூ.7850 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளியன்று திண்டுக்கல் மாவட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் காலித் தட்டேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பி.ரீட்டா, மாவட்டச்செயலாளர் எஸ்.செல்வராஜ், நிர்வாகிகள் கே.பாலகிருஷ்ணன், பி.தமி ழரசன், எஸ்.பெருமாள், ஆகியோர் பேசினர். இதே போல் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, நிர்வாகிகள் விசாலாட்சி, விமலாகாந்தா, பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்;டத்தில் மாவட்ட பொருளாளர் குமரம் மாள் பங்கேற்றார். நிலக் கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் நாராயண சாமி கலந்து கொண்டார். (நநி)