வேடசந்தூர், ஜூன் 13- வேடசந்தூர் அருகே உள்ள எரி யோட்டில் சாலையில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள குடிநீர் குழாய் வால்வு குழியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். திண்டுக்கலில் இருந்து எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை, பாளையம் வழியாக கரூர் வரை நான்கு வழிச்சாலை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப் பட்டு வருகிறது. எரியோட்டில் காவல் நிலையம் எதிரே சாலையோரமாக காவேரி கூட்டுக்குடிநீர் செல்லும் பைப்பில் வால்வு உள்ள இடத்தில் பெரிய குழியாக இருந்தது. தற்போது சாலை அகலப்படுத்தப்பட்டதால் வால்வுடன் கூடிய குழி சாலைக்கு வந்துவிட்டது. இத னால் இரவு நேரத்தில் குழி தெரியாததால் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் குழி யில் விழுந்து காயமடைகின்றனர். பெரும் விபத்து நடப்பதற்குள் வால் வினை சாலையோரத்தில் மாற்றி அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.