districts

img

கம்பத்தில் அரிசி கொம்பன் யானை அலப்பறை

தேனி, மே 27- இடுக்கி மாவட்டத்தில் அச் சத்தை ஏற்படுத்திய அரிசி கொம்  பன் என்னும் ஒற்றை யானை சனிக்கிழமை அதிகாலை கம்பம் நகருக்குள் நுழைந்ததால் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்  தனர். பாதுகாப்பு கருதி கம்பத்தில்  மின்விநியோகம் துண்டிக்கப்பட் டதுடன் 144 தடை உத்தரவும் பிறப்  பிக்கப்பட்டது.  கேரள மாநிலம் இடுக்கி மாவட்  டம் சின்னக்கானல், தேவிகுளம், வட்டக்கானல் வனப்பகுதியில் அரிசிக் கொம்பன் என்னும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதுவரை 8பேர் இந்த யானை தாக்கி இறந்துள்ளனர். ரேசன்கடைகளை தாக்கி அரிசியை  விருப்ப உணவாக உண்டதால் இதனை கேரளாவில் அரி கொம் பன் யானை என்று பெயரிட்டு அழைத்தனர். தேயிலை தோட்ட தொழிலா ளர்களுக்கும், சுற்றுலா பயணி களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானையை இட மாற்றம் செய்ய கேரள வனத்துறை யினர் முடிவு செய்தனர். இதன்படி கடந்த ஏப்ரல் 29 ஆம்  தேதி இந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு தமிழக எல்லையான  பெரியாறு புலிகள் காப்பகம் முல்லைக்கொடி எனும் வனப்பகு தியில் விட்டனர். முன்னதாக இதன்  நடமாட்டத்தை தெரிந்து கொள்ள வசதியாக இதன் கழுத்தில் சாட்டி லைட் ரேடியோ காலர் பொருத்தப் பட்டது.

இந்த யானை கண்ணகி கோயில் வழியே மேகமலை வனப்  பகுதிக்குள் அடுத்தடுத்து நுழைந் தது. இதனால் மேகமலை பகு திக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல  தடை விதிக்கப்பட்டது. இந்நிலை யில் சனிக்கிழமை காலை இந்த யானை தனது வாழ்விடத்திற்கான வழித்தடத்தை தேடி கம்பம் நக ருக்குள் புகுந்தது.  இதனால் பொதுமக்கள் அலறி யடித்து ஓடினர். கூச்சலிட்டும், வாக னங்களின் ஹாரனை ஒலிக்கச் செய்தும் பொதுமக்களை பல ரும் எச்சரித்தனர். கம்பம் நகர் குடி யிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து  வரும் வழியில் வனத்துறையினரின் வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ  வாகனத்தை தாக்கி சேதப்படுத்தி யுள்ளது. மேலும், யானையினை பார்ப்பதற்காக அந்த வழியில் சென்ற கம்பம், ஆசாரியார் தெரு வைச் சேர்ந்த சடையாண்டி மகன்  பால்ராஜ் என்பவரை தாக்கியதில்  காயம் ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்  காக தேனி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். மிரண்டு போன யானை, கம்பம் துணை மின்  நிலையம் அருகே சென்றது. பாது காப்பு கருதி கம்பம், புதுப்பட்டி பகுதி மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. பல்வேறு தெருக்கள் வழியே  சென்ற யானை கம்பம் கூடலூர்  சாலை அருகே உள்ள புளியந்தோப்  புக்குள் புகுந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரவீன் உமேஷ்டோங்கரே, மேகமலை புலிகள் வன சரணாலய  துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, கூடலூர், கம்பம் வனச்சரகர்கள் முரளிதரன், அன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து டம்மி துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கி சுட்டு வனப்பகுதிக்குள் அனுப்பும் பணி யில் வனத்துறையினர் ஈடுபட்ட னர்.

ஆட்சியர் அறிக்கை 

அரிக் கொம்பன் யானையை பிடிக்க ஏதுவாக, அதனை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்த வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறையினரால் தக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அரிக்கொம்பன் யானையானது பொதுமக்களை தாக்காமல் இருக்க கம்பம் நகர்  முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்  பிக்கப்பட்டுள்ளது.  எனவே, அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அரிக்கொம்பன் யானை செல்லும் பாதையில் எவ்வித இடையூறு செய்யாமல் இருக்குமாறும், புகைப்படம் மற்றும் வீடியோ ஏதும் எடுக்க யானையின் அருகில் செல்வதை தவிர்க்குமாறும் யானையினைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடப் படும் வரை பொதுமக்கள் தக்க  ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும், அரிக்கொம்பன் யானையினை பிடித்து வனப்பகு திக்குள் விடப்பட்ட பின்னர் 144 தடை உத்தரவானது முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும் என  மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை கம்பம்-கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலை யயடிவாரம் வாழைத்தோப்பில் யானை முகாமிட்டிருந்தது. தொடர்ந்து இந்த யானையை  வனப்பகுதிக்குள் துரத்துவ தற்கான பணிகள் நடைபெற்று வரு கின்றன.