ஒட்டன்சததிரத்தில் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
ஒட்டன்சத்திரம், ஆக.16- ஒட்டன்சத்திரத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியைச் சேர்ந்த (வயது 43). விவசாயி யான இவர் தனது தந்தை வேலுச்சாமி இறந்துவிட்டார் என்ப தால் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். தாலுகா அலுவலககத்தில் கிராம வருவாய் ஆய்வாள ராக பணியாற்றிய பாண்டியன் (வயது 44) என்பவர் மாரி முத்துவிற்கு வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.10 ஆயி ரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். பின்னர் பேரம் படிந்து ரூ.8 ஆயிரம் வழங்குவதாக மாரிமுத்து ஒப்புக்கொண்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மாரிமுத்து இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரி வித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்த லின்படி, ரசாயன மை தடவிய ரூ.8 ஆயிரத்தை மாரிமுத்து நேற்று காலை ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலத்துக்கு கொண்டு சென்றார். அந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் பாண்டியனி டம் மாரிமுத்து வழங்கினார். அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, வரு வாய் ஆய்வாளர் பாண்டியனை பிடிக்க முயன்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வருவாய் ஆய்வா ளர் பாண்டியன் தன்னிடம் இருந்த லஞ்சப் பணத்தை மறைக்க முயன்றார். எனினும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ ரிடம் இருந்த லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருவாய் ஆய்வாளர் பாண்டி யனை கைது செய்தனர். வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
தேனி, ஆக.16- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பிணி யாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த வர் 17வயது சிறுமி. இவரது அம்மா, அப்பா தனியார் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இதே ஊரில் வெல்டராக வேலை பார்க்கும் சிறுமியின் உறவினர் பிரசாந்த் (27) அடிக்கடி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்படவே தேனி தனியார் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது. இதில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிறு மிக்கு ஆண்குழந்தை பிறந்தது. தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் பிரசாந்த் மீது ஆய்வாளர் மாயா ராஜலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார்.
ஆக.19 பெரியகுளம் மேரி மாதா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
தேனி, ஆக.16- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை பெரியகுளம் அருகே உள்ள மாதா கல்லூரியில் சனிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் (மக ளிர் திட்டம்) இணைந்து 1000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பெரியகுளம் மேரி மாதா கல்லூரி யில் வருகிற ஆக 19 ஆம் தேதி அன்று நடைபெற உள் ளது. முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ., டிப்ளமோ, ஐடிஐ, நர்சிங், பார்மசி, டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர கல்வித் தகுதிகளுடைய அனைவரும் பங்கேற்கலாம். அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இம்முகாமில் பங்கேற்கும் வேலை நாடுனர்கள் “https://forms.gle/nb58ffYT7RQUFqZPA“ என்ற google Form Link மூலம் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இன்று இராமநாதபுரத்திற்கு முதல்வர் வருகை
இராமநாதபுரம்,ஆக.16- இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 17-18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மதுரையில் இருந்து காரில் வருகை தருகிறார். மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் வழி நெடுகிலும் திமுக சார்பில் வரவேற்பு மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயரத்தில் திமுக இரு வண்ண கொடி ஏற்றி வைக்கிறார். . இதன் பின்னர் பேராவூரின் நடை பெறும் தென் மாவட்ட அளவிலான பாக முக வர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். வெள்ளிக் கிழமை காலையில் மண்டபத்தில் நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் கலந்துகொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதன் பின்னர் பேரூரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சின் போது தமிழ்நாடு அரசு சார்பில் நலத்திட்ட உதவி கள், மீனவர்களுக்கு உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடன் வழங்கு தல்,பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவுக்கு எம்சாண்ட்மணல் கடத்தல்; லாரி பறிமுதல்
தேனி, ஆக.16- கேரளாவிற்கு எம் சாண்ட் மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் உதவி புவியி யலாளராக பணிபுரிபவர் பாண்டியராஜன். இவர் கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்த தில் நடைச்சீட்டு இல்லாமல் 8 யூனிட் எம் சான்ட் கனி மத்தை கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் லாரியை கைப்பற்றிய கம்பம் வடக்கு காவல்துறையினர் தப்பி யோடிய ஓட்டுநரை தேடி வருகிறார்கள்.