விருதுநகர், ஜூன் 2- மருத்துவக் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்தல், நீதிமன்ற உத்த ரவுப்படி ஓய்வூதியர்களுக்கு பணப் பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி -கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அச்சங்கத் தின் மாவட்டத் தலைவர் கா.சிவபெருமான் விருது நகரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறிய தாவது : அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களிடம் மாதம் ரூ.148 வீதம் பிடித்தம் செய் யப்பட்டது. ஓய்வு பெறும் நாளில் ரூ.10 ஆயிரமாக வழங்குவர். ஆனால், 5 மா வட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப் படவில்லை. எனவே, நீதிமன் றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. இதையடுத்து, 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கி னர். ஆனால், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரி யர்களுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது வரை மீதி ரூ.5 ஆயிரம் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு 3 முறை பதிவு அஞ்சல் மூலம் புகார் கடிதம் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. ஓய்வூதியத்தில் மாதந் தோறும் மருத்துவக் காப்பீட்டிற்காக ரூ.350 பிடித்தம் செய்யப்படுகி றது. தனியார் மருத்துவம னையில் சிகிச்சை பெறும் ஓய்வூதியருக்கு முழுத் தொ கையும் இன்சூரன்ஸ் நிறு வனம் வழங்க மறுக்கிறது. இதனால், சிகிச்சையின் போதே ஓய்வூதியர்கள் வட்டி க்கு பணம் பெற்று மருத்துவ மனைகளுக்கு செலுத்தும் நிலை உள்ளது. மேலும், வெம்பக் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியின் போது இறந்துள்ளார். ஆனால், பலமுறை மனு அளித்தும் அவரது மனைவி க்கு கருணை அடிப்படையி லான அரசுப் பணிக்கு பரிந்துரை செய்ய மாவட்ட கல்வி அலுவலர் மறுத்து வருகிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி வரும் ஜூன் 7 இல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். அதில் மாநிலத் தலைவர் முரளிதரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, மாநில செயற்குழு உறுப்பி னர் தங்கவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் வேல் சாமி, சிவகாசி பகுதி நிர்வாகி ரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.