விருதுநகர், அக்.31- 70 வயது நிறைந்த வர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; மருத்துவக் காப்பீட்டு நிதியை அரசே முழுமையாக ஏற்க வேண் டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு, கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கு ரயில் பய ணச் சலுகையை ரத்து செய்தது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கா.சிவபெருமான் தலைமையேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, மதிப்பியல் தலை வர் ச.தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராமன் பேசினார். போராட்டத்தை ஆத ரித்து மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சந்தி யாகப்பன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் குருசாமி, சந்திரராஜன், தங்கப்பழம் ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்டச் செயலாளர் வேல்சாமி கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பால குமார், அருள் சூசை, கணே சன், சஞ்சீவிப் பாண்டியன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.