உயர் பென்ஷன் அனைவருக் கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பஞ்சாலை ஓய்வூதி யர்கள் சார்பில் உண் ணாவிரதப் போராட் டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடை பெற்றது. மாவட்டத் தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். எஸ்.பி.சிவசாமி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி துவக்கி வைத்தார். மின் ஊழியர் ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி.இராமச்சந்திர பாபு, பஞ்சாலை ஓய்வு பெற்றோர் நல சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். இதில், குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9 ஆயிரம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வந்த ரயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி உயர் உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.