districts

img

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசுக்கு எதிராக மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கண்டன தீர்மானம்

மதுரை, ஜூலை 28- மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் அறிஞர் அண்ணா மாளி கையில் உள்ள மாநகராட்சி கூட்ட அரங்கில் ஜூலை 28 வெள்ளியன்று மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தம், ஆணையாளர் ஜே.கே.பிரவீண் குமார், துணை மேயர் டி.நாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மணிப்பூர் கலவ ரத்தில் தற்போது வரை எந்த நடவ டிக்கையும் எடுக்காமல் ஒன்றிய அரசு தவறி வருகிறது. வரும் காலத் தில் அதற்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள். மணிப்பூர் கலவ ரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை இந்த மாமன்ற கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சி பகுதியில் நடை பெற்று வரும் சாலை பராமரிப்பு, பாதாள சாக்கடை அமைப்பு பணி, சுகாதாரம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிக ளுக்கு ஊதியம் வழங்கிட தமிழக அரசின் உத்தரவுக்கு நன்றி தெரி வித்தல் என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

விவாதத்தில் மண்டலம் - 1 தலை வர் வாசுகி பேசுகையில், மண்ட லங்களுக்கு தனியாக சிறப்பு நிதி ரூ.50 லட்சம் வரை வழங்க வேண் டும். அப்படி ஒதுக்கினால்தான் மண்டலங்களின் உள்ள சிறு அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்ப தற்கு உதவியாக இருக்கும் என்றார்.  மண்டலம் - 2 தலைவர் சரவண புவனேஸ்வரி பேசுகையில், மண்டலத்திற்கு உட்பட்ட ஜேசிபி வாகனம் பழுதடைந்துள்ளது .இத னால் பல பணிகள் மேற்கொள்வ தில் சிரமம் ஏற்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஜேசிபி இயந்திரத்தை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். பல மாமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் அலு வலகம் இல்லாத நிலை உள்ளது. எனவே விரைவில் அலுவலகம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து வரு கிறது அவற்றை மேம்படுத்து வதற்கு ஆசிரியர்கள் நியமனம் பற்றாக்குறை உள்ளது என்று  கூறுகிறார்கள். எனவே போதிய ஆசிரியர்கள் நியமிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மாநகராட்சி பகுதி களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் சாலைகள் சீரமைப்பு பணி களை விரைந்து முடிக்க வேண்டும் மழைநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்டல தலைவர்கள் பேசினர். 

முறையான பதில்கள் அளித்திடுக!

சில மாமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மயா னங்களை சீரமைக்க வேண்டும். குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மக்களுக்கு வழங்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலம் தொடங்க உள்ள நிலை யில் சாலைகள் அமைக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை பணி களை விரைந்து முடிக்க வேண்டும்.  மாநகராட்சி கட்டிட வரைபட அனு மதியின்றி தங்கள் இடங்களில் கூடுதல் கட்டிடம் கட்டியவர்க ளுக்கு வரி விதிப்பின் போது அப ராதம்  விதிக்கப்படுகிறது அப்படி அபராதம் விதிக்கப்படுவது ஒவ்வொரு முறையும் அவர்கள் வரி செலுத்தும் போது இந்த அபரா தம்  விதிக்கப்படுகிறது. எனவே அதை முறைப்படுத்தி ஒரே தவணை யில்  அபராதம்  விதிக்க வேண்டும். கூட்டத்தில் கேட்கப்படும் கேள்வி களுக்கு எழுத்து மூலம் பதில் கேட் டால் அவை தவறான பதில்களா கவே அளிக்கப்படுகிறது. எனவே அளிக்கப்படும் பதில்கள் முறையா னதாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும் என்று பேசி னார்கள்.