மதுரை, ஆக. 11- மதுரை மேலப்பொன்னகரம் 6ஆவது தெருவில் உள்ள மின் கம்பம் மீது மரம் ஒன்று சாய்வது போல் உள்ளது. பலத்தக் காற்று வீசினால் மரக்கிளைகள் மின்கம்பம் மீது உரசுகிறது. தற்போது பெய்த மழையால் மரக்கிளைகள் அதிக ளவு மின் கம்பத்தின் மீது சாய்ந்துள்ளது. இதனால் மழை நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர் .எனவே மின்பத்தின் மீது சாய்ந்துள்ள மரக்கிளைகளை உடனடியாக அகற்ற மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.