கடமலைக்குண்டு, மே.13 தேனி மாவட்டம், கட மலைக்குண்டு ஊராட்சிக்கு கரட்டுப்பட்டி அருகே மூல வைகை ஆற்றில் உறை 3 கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. குடிநீர் விநியோகத் திற்காக ஆற்றங்கரை அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுதான தால் கடமலைக்குண்டு ஊராட்சிக்கு குடிநீர் விநி யோகம் பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடமலைக் குண்டு மின்வாரிய அலுவ லகத்திற்கு கோரிக்கை விடுத் தும் தற்போது வரை டிரான்ஸ் பார்மர் சீரமைக்கப்பட வில்லை. இதனால் கடமலைக் குண்டு ஊராட்சியில் கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் வேறு கிராமங்களு க்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சிலர் மூலவைகை ஆற்றுக்கு சென்று உறை கிணற்றுக் குள் ஆபத்தான முறையில் இறங்கி குடங்கள் மூலம் குடிநீர் பிடித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட மாவட்ட அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மர் பழுதை சீரமைத்து கட மலைக்குண்டு ஊராட்சிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.