districts

நாட்டு மாடுகளை பாதுகாக்க மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதி கொடுக்க வேண்டும்

தேனி ,டிச.24- பாரம்பரிய நாட்டு மாடு இனங்களை பாது காக்க, வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும்  என பென்னிகுக் பாரம்பரிய மலை மாடு வளர்ப்போர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.   தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  க.வீ.முரளீதரன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ,பென்னிகுக் மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத் தலை வர் கென்னடி ,பேசுகையில் ,தேனி மாவட்டத் தில் வனத்துறையினர் மேய்ச்சலுக்கு அனு மதிக்காத நிலையில்  40 க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள் ளது. பாரம்பரிய நாட்டு மாடுகள் அழியும் நிலை தேனி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது .எனவே மலை மாடுகளுக்கு அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்றார் . மேகமலையில் பட்டா  ஆண்டிப்பட்டி வட்டம் ,கடமலை -மயி லை ஒன்றியத்தில் உள்ள 8 ஊராட்சிகளில் 24 கிராமங்களில் வன விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறார்கள் .வன உரிமை சட்டம் 2006 -ன் படி பட்டா வழங்க வேண்டும் என முறைப்படி மனு அளித்துள்ளனர் .மேலும் வன உரிமைக்குழு மற்றும் தமிழ்நாடு  விவசாயிகள்  சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை நிலுவையில்  உள்ளது .எனவே  மறு குடியமர்வு பட்டியல் தயாரிப்பது வன உரிமை சட்டத்திற்கு எதிரானது .

மேலும் புலிகள் சரணாலயம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்து கேட்கப் படவில்லை. வருசநாடு மலைக்கிராமங்களில் நீண்ட காலமாக குடியிருந்து ,விவசாயம் செய்து வரும் மக்களுக்கு வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் .24 கிராமங்களில் மறு குடியமர்வு விவர பட்டியல் தயாரிக்கும் பணியை கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன் பேசினார். வருசநாடு வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு கடன் தள்ளுபடி சான்று வழங்கிடவும், வருசநாடு முதல் வாலிப்பாறை வரை தார் சாலை அமைக்க வனத்துறை மூலம் அனுமதி வழங்கிடவும், கோம்பை முதல் இராமக்கல் மேடு வரை இணைப்பு சாலை அமைத்து தரவும், 18-ம் கால்வாய் இருபுறமும் தூர்வாரி கரைகளின் அருகில் பலன் தரும் மரங்கள் நட செய்திடவும், ஓடைப்பட்டி, ஊஞ்சாலம்மன் கண்மாய்க்கு நீர் வசதி செய்து தரவும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள்  முன்வைத்தனர்.  விவசாயிகள் வைத்த கோரிக்கைக ளுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் ச.வித்யா,  மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தி.அழகு நாகேந்திரன்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.