districts

img

மதுரை-தேனி மாவட்டத்தை இணைக்கும் மல்லபுரம் மலைச்சாலையை சீரமைத்திடுக!

கடமலைக்குண்டு, ஜூன்.16- தேனி மாவட்டம், மயிலாடும் பாறை அருகே தாழையூத்து வழி யாக மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லபுரம் மலைச் சாலை அமைந்துள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுடைய மலைச்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இத னால் சாலை அதிக அளவில் சேத மடைந்து காணப்படுகிறது. சில இடங்களில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற் பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவு கிறது. அடுத்து மழைக்காலம் தொ டங்க உள்ளதால் சாலை மேலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிடும் அபா யம் உள்ளது.  இது தொடர்பாக தாழையூத்து பகுதி விவசாயிகள் கூறுகையில், மலைசாலை அமைக்கப்பட்ட புதி தில் தாழையூத்து-மல்லபுரம் இடையே அரசு மினிபேருந்து  சேவை தொடங்கப்பட்டது. இது இரண்டு மாவட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதன் பின்னர் போதிய அளவு பரா மரிப்பு இல்லாத காரணத்தால் சாலை சேதமடைய தொடங்கியது. மேலும் மரம், செடிகள் ஆக்கிரமிப் பால் சாலையின் அளவு குறுகிய தால் தொடங்கப்பட்ட சில மாதங்களி லேயே மினி பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இருப்பினும் பொது மக்கள் வேன், லாரி உள்ளிட்ட வாக னங்களை போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது சாலை மிகவும் சேதமடைந்த கார ணத்தால் பெரிய வாகனங்களும் இயக்க முடியவில்லை. தற்போது பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங் கள் மட்டுமே சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாய விளைபொருட்களை அதிக தொலைவு உடைய க.வில க்கு, ஆண்டிபட்டி வழியாக மதுரை,  விருதுநகர் ஆகிய மாவட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பயணச் செலவும் நேர விரையமும் ஏற்படு கிறது. இரண்டு மாவட்ட அதிகாரிக ளும் நடவடிக்கை எடுத்து மல்லபுரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் ஆபத்தான வளைவுகளில் புதிய தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.