districts

img

மலைக்கிராமங்களில் பழுதடைந்த சோலார் விளக்குகளை சீரமைத்திடுக!

கடமலைக்குண்டு, பிப்.2- தேனி மாவட்டம், கட மலை-மயிலை ஒன்றியத்தில்  மேகமலை ஊராட்சிக்கு உட் பட்ட அரசரடி, இந்திரா நகர், நொச்சிஓடை ,பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளனஇந்த கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கிராமங்களில் மின்சார வசதி செய்ய அரசு  நடவடிக்கை எடுத்தது. ஆனால்  வனப்பகுதியில் வனவிலங்கு கள் அதிக அளவில் உள்ள தால் மின்சார வசதி செய்ய  வனத்துறையினர் அனுமதி  மறுத்தனர். அதனைத்தொட ர்ந்து கிராமங்களில் அரசு சார்பில் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த  நிலையில் சோலார் விளக்கு கள் பொருத்தப்பட்ட பின்பு  10 ஆண்டுகளா எந்தவித பரா மரிப்பு பணிகளும் மேற்கொள் ளப்படவில்லை. இதனால் மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்ட சோலார் விளக்குகள் பழுதடைய தொடங்கியது. இதனால் மலைக்கிராம மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிர மப்பட்டு வருகின்றனர். இதே போல மலைக்கிராமங்களில் ஏராளமான மாணவ -மாணவி கள் உள்ளனர். இரவு நேரங்க ளில் போதிய வெளிச்சம் இல்  லாததால் இவர்களால் படிக்க முடியவில்லை.  எனவே பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை வெளியூர்களுக்கு அனுப்பி  விடுதிகளில் தங்கி படிக்க வைத்து வருகின்றனர். தற்  போது வனப்பகுதியில் மழை அளவு குறைந்துள்ளதால் யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் நீர் தேடி கிராமங்களுக்குள் வர தொடங்கியுள்ளது.தெரு விளக்குகள் இல்லாமல் கிரா மங்கள் இருளில் மூழ்கி யுள்ளதால் வனவிலங்கு களுக்கு அச்சப்பட்டு பொது மக்கள் இரவு நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர்,நொச்சி ஓடை உள்ளிட்ட மலைக்கிரா மங்களில் பழுதடைந்துள்ள சோலார் விளக்குகளை உரிய முறையில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

;