districts

img

சாந்தநேரி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருக!

கடமலைக்குண்டு,  ஜுலை 17- தேனி மாவட்டம், மயி லாடும்பாறை அருகே 81  ஏக்கர் பரப்பளவில் சாந்த நேரி கண்மாய் அமைந்துள்  ளது. இந்த கண்மாயை சுற்றி லும் ஆயிரக்கணக்கான ஏக்  கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசா யம் நடைபெற்று வருகிறது.  இந்த கண்மாயில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பரா மரிப்பு பணிகளும் மேற் கொள்ளப்படவில்லை. இத னால் கண்மாய்க்கான வரத்து வாய்க்கால் முழுவதும் செடி கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் கண்மாயில் நீர் தேங்குவதில்லை.  எனவே தனி நபர்கள் சிலர் கண்மாயின் பெரும் பாலான பகுதியை ஆக்கிர மித்து விவசாயம் செய்து வரு கின்றனர். ஆக்கிரமிப்பு களை அகற்றக்கோரி பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதனால் நாளுக்கு நாள் கண்மாயில் தனிநபர்கள்  ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூலக்கடை-மந்திச்சுனை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்  தின் உதவியால் ஆக்கிர மிப்பில் இல்லாத பகுதிகள்  மட்டும் தூர்வாரப்பட்டு கரை கள் பலப்படுத்தப்பட்டன. இதனால் தற்போது தூர்வா ரப்பட்ட குறிப்பிட்ட அளவி லான பகுதியில் மட்டும் நீர்  தேங்கி காணப்படுகிறது. கட மலை-மயிலை ஒன்றியத்தில் பரப்பளவில் இரண்டாவது  பெரிய கண்மாயான சாந்த நேரி கண்மாயில் முழுமை யாக நீர் தேக்கி வைக்கும்  பட்சத்தில் ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் விவ சாயம் செழிப்படைவதுடன் மூலக்கடை, முத்தாலம் பாறை, சிறப்பாறை உள்  ளிட்ட ஏராளமான கிராமங்க ளில் குடிநீர் தட்டுப்பாடு அபா யம் முழுமையாக நீங்கும் என பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.  எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுத்து சாந்த நேரி கண்மாயில் உள்ள ஆக்  கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.