districts

img

வனப்பகுதிகளில் அந்நிய தாவரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும்

சென்னை, நவ. 16- தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வு ணர்வு திட்டம் 920 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில வன உயிரின வாரியக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதனன்று (நவ. 16)  தலைமைச் செயலகத்தில் நடை பெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காடுகள் இன்றி நீர்வளம்  சிறக்காது, நீர்வளம் இன்றி வேளாண்மை வளப்படாது. எனவே, வளமான எதிர்காலத்திற்கு காடுகள் அவசியம். காடுகள் வளம்பெற வன உயிரினங்கள் அவசியம். மாநில வன  உயிரின வாரியம் என்பது வன உயிரினப்  பாதுகாப்பில் முக்கியக் கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடியது.  இந்திய தேசிய பல்லுயிர் ஆணைய  அறிக்கையின்படி தாவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள தாவரங்களின் வளமை என்பது இந்தியாவிலேயே முதன்மையாக உள்ளது. இவை மட்டுமின்றி வன  உயிரினங்களிலும் 5 புலிகள் காப்ப கங்கள், 5 யானைகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோளகக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங் கள் என நமது மாநிலம் வனஉயிரின வளமைமிக்க ஒரு மாநிலமாகத் திகழ்கிறது. இந்தப் பெருமைமிகு பாரம் பரியத்தை, வளத்தை மேம்படுத்து வதே நமது முக்கியப் பணி என்றார்.

“தமிழ்நாட்டினுடைய வன உயிரின வளமை” குறித்த புத்தகத்தை வெளி யிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகி றேன். இச்சிறு புத்தகம் இந்த அரசு மேற்கொண்டு வரக்கூடிய வன உயி ரினப் பாதுகாப்பு முயற்சிகளை நாம் அறிந்து கொள்ள பெரிதும் உதவும்.  தமிழ்நாடு அரசு யானைகளைக் கண்காணிக்கும் வனக்காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்து வதற்கும், வேட்டைத்தடுப்பு முகாம் களை அமைப்பதற்கும், ஆளில்லா வாகனங்கள், ஆளில்லா விமானங் கள், இரவு பார்வை கேமராக்களை வாங்குவதற்கும், வேட்டைத் தடுப்புப் படைகளை உருவாக்குவதற்கும், யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் என 2 கோடியே 41 லட்சம் ரூபாயை அனுமதித்துள்ளது. இது போன்ற ஒரு முறையான அறிவி யல் அணுகுமுறை மூலம் மனிதர்கள் யானை மோதல்களை குறைக்க முடியும். இது மட்டுமின்றி வன உயிரின வாழ்விடங்களை மேம்படுத்தும் பொருட்டு, சுமார் 282 எக்டேர் பரப்பள வுள்ள வனப்பரப்பில் அந்நிய  களைத்தாவரங்கள் அகற்றப்பட்டுள் ளன. இந்தப் பணியானது வனப்பகுதி களில் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து  நடைபெறும் என்பதையும், அதன் மூலம் வன உயிரினங்களின் வாழ்விடங்கள்,  அதன் ஆரம்ப இயற்கைச் சூழலுக்கு கொண்டுவரப்பட்டு, வாழ்விடங்களின் தரம் மேம்படுத்தப்படும் . . இந்த ஆண்டு முதல் நமது அரசு தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும்  பசுமை காலநிலை மாற்ற எதிர்வு ணர்வு திட்டத்தை 920 கோடியே 56 லட்சம்  ரூபாய் மதிப்பில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவன உதவி யுடன் செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தில் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயற்கை வள ஆதாரங்களை அதி கரித்தல், சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வனநிலம் மற்றும் வன உயிரின வாழ்விடங்களின் தரம் குன்றுதலை தடுத்தல், நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டா லின் பேசினார்.