தோழர் ஆர்.கோபால் காலமானார்
திண்டுக்கல், ஜுலை. 21- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்;டம் பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் தோழர் ஆர். கோபால் (வயது 88) காலமானார். மகள் வீட்டுக்கு சென்ற தோழர் கோபால் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கட்சியின் கொடைக்கா னல் தாலுகாக்குழு உறுப்பினராக நீண்ட காலமாக செயலாற்றியவர். இவருக்கு. 2 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பாக மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதா னந்தம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். (நநி)
பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.9.50 லட்சம் நிவாரணம்
விருதுநகர், ஜூலை.21- பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.9.50 இலட்சத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார். சிவகாசி அருகே ஆனையூரில் கடந்த ஏப்ரல் 15 அன்று தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இடையன்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி உயிரி ழந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி, உயிரிழந்த தங்க வேல் மனைவி பாப்பாத்தி ஆகியோருக்கு தலா ரூ.3 இலட்சம் மதிப்பிலான காசோலைகள், காயமடைந்த மாரனேரியைச் சேர்ந்த கருப்பம்மாளுக்கு ரூ.50 ஆயிர மும் வழங்கப்பட்டது. மேலும், கடந்த ஏப்ரல் 22 வெம்பக் கோட்டையில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஜெயசித்ரா உயிரிழந்தார். எனவே, அவரது கணவர் அருணாச்சலத்திடம் ரூ.3 லட்சம் காசோ லையை ஆட்சியர் வழங்கினார்.
பாசன கால்வாயில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு
மதுரை ஜூலை 21- மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் பகுதியில் முல்லை பெரியார் பாசன கால்வாயில் பெண் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு காவல்துறை சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது. அதே பகுதியை சேர்ந்த மார் கண்டன் மனைவி விஜயா (48) என தெரியவந்தது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் உடல்நலம் சரியில்லாமல் பல ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
திமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்ட 8 பேர் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரண்
அருப்புக்கோட்டை, ஜூலை.21- திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேர் அருப்புக்கோட்டை நீதிமன்றத் தில் சரணடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் திண்டுக்கல் மாநகர கிழக்கு திமுக மாணவ ரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சரவணன், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அடையா ளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை யன்று அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆசிப் முகமது, முகமது மீரான், கலீல் அக மது, சதாம் உசேன், முகமது இர்ஃபான், சக்தி மகேஸ்வர், முகமது அப்துல்லா, சேக் அப்துல்லா ஆகிய 8 பேர் சரணடைந்தனர்.
தேனியில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
தேனி ,ஜூலை.21- தேனியில் ரூ 3.51 கோடி மதிப்பில் ஒருங்கிணை ந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா துவக்கிவைத்து பார்வையிட்டார். ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடத்தில் மாவட்ட பதிவாளர் நிர்வாகம் மற்றும் தணிக்கை அலுவலகம், எண் 1.இணை சார் பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட நான்கு அலுவலகங்கள் செயல்பட உள்ளது. காத்திருப்போர் அறை, குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம், கழிவறை வசதி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை வச தியுடன் சக்கர நாற்காலி வசதி மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கு முறையான கழிவறை வசதி, உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மதுரை துணைப் பதி வுத்துறைத் தலைவர் இரா.இரவீந்தர்நாத், மதுரை சரக உதவி பதிவுத்துறைத் தலைவர் .என்.ராஜ்குமார், மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம் மற்றும் தணிக்கை) விஜயசாந்தி, தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிஐடியு பெயர் பலகை திறப்பு
தேனி ,ஜூலை.21- தேனியில் சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேனி மேற்கு சந்தை கிளையில் பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது .சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர் . வெங்கடேசன் கொடியேற்றி வைத்தார். சிஐடியு மாவட்ட தலைவர் டி.ஜெயபாண்டி. கிளை தலை வர் பவுன் பாண்டி, கிளை செயலாளர் ஆரோக்கியம், கிளை பொருளாளர் சுரேஷ், கவுரவ தலைவர் ரெங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் கணக்கீடு குறித்து அதிகாரிகள் ஆய்வு
தேனி,ஜூலை. 21- பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு, அதிகபட்சம் வெளியேற்றக்கூடிய தண்ணீரின் அளவு குறித்து நீர்வளத்துறை, மின்வாரியத்துறை அதிகாரிகள் வெள்ளியன்று “ஃபோர்பே” டேம் பகுதியில் ஆய்வு செய்தனர். முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் தேக்கடி ஏரியிலிருந்து சுரங்கவாய்க்கால் முலமாக பென்ஸ்டாக் பைப் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1800 கனஅடி தண்ணீரும், இறைச்சல்பாலம் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டால் இறைச்சல்பாலம் வழியாக அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் கொண்டு செல்லலாம் என மதிப்பீடு செய்வதற்காக தமிழகப் பகுதிக்கு சுரங்க வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து சேரும் “ஃபோர்பே” டேம் பகுதியிலும், “ஃபோர்பே” டேமில் இருந்து பென்ஸ்டாக் பைப் வழியாக தண்ணீர் செல்லும் பகுதியிலும், இறைச்சல்பாலம் வழியாக தண்ணீர் செல்லும் பகுதியிலும் தமிழக நீர்வளத்துறை, மின்வாரியத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வில், நீர்வளத்துறை திட்ட உருவாக்க முதன்மை பொறியாளர் பொன்ராஜ், மதுரை மண்டல முதன்மை பொறியாளர் ஞானசேகர், சென்னை நீர்வ ளத்துறை இயக்கம் மற்றும் பராமரிப்பு முதன்மை பொறியா ளர் சுரேஷ், நீர்வளத்துறை பொறியாளர் மலர்விழி, பெரி யாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் நவீன் குமார், ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மதிப்பிழந்த நிலங்களாக நிர்ணயித்த பத்திரப்பதிவுத்துறை
விவசாயிகள் சங்கம் கண்டனம்
திண்டுக்கல், ஜூலை 21- ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட நிலங்கள் மதிப்பில்லாத நிலங்களாக பத்திரப்பதிவுத்துறை அலுவல கங்கள் நிர்ணயித்துள்ளதாக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட கள்ளிமந்தையம், கொத்தயம், தேவத்தூர், சிக்கமநாயக்கன்பட்டி, கிராமங்க ளுக்குட்பட்ட நிலங்கள் விற்கவோ, வாங்கவோ முடி யாதபடி ஜீரோ மதிப்பாக, அதாவது மதிப்பிழந்த நிலங்க ளாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இப்பகுதியில் சிப்காட் அமைக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தப்போவதாக விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இப்பகுதி விவசாயிகள் கண் வலிக்கிழங்கு, மருத்துவச்செடிகள், தக்காளி, முருங்கை உள்ளிட்ட தோட்டக்கலைபயிர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். நூற்றுக்கணக்கான கிணறுகள், பல நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகளின் நீராதாரத்தை நம்பியே விவசாயிகள் உள்ளனர். மாம்பழக்கூழ், கொய்யாப்பழ கூழ், தக்காளிக்கூழ் போன்ற விவசாயம் சார்ந்த சிறு குறு தொழிற்சாலை கள் வருவதற்கு ஆட்சேபணை இல்லை. அதே போல் விவசாயத்தை அளிக்கக்கூடிய ரசாயன தொழிற்சாலை களை அனுமதிக்கக்கூடாது. அப்படிப்பட்ட தொழிற் சாலைகளால் நிலத்தடி நீர், மண் வளம், சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது, கள்ளி மந்தையம் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மதிப்பில்லாத நிலங்களாக அதாவது ஜீரோ வேல்யூ அமலாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும், விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். (நநி)
கடமலை- மயிலை ஒன்றிய கிராமங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்கிடுக!
விவசாயிகள் கோரிக்கை
கடமலைக்குண்டு, ஜுலை.21- தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து மின் கம்பிகள் மேல் விழுவதால் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மின்சாரத்தை மட்டும் அதிகம் சார்ந்து கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல மின்வெட்டு காரணமாக பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பயிர்களுக்கு முழுமையாக நீர் பாய்ச்ச இரவு நீண்ட நேரம் வரை விவசாயிகள் தோட்டங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வழக்கமாக ஆடி மாதங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மாத தொடக்கத்திலேயே காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கிராமங்களிலும் மின்கம்பிகளுக்கு அருகே இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்றி கிராமங்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.