districts

img

சுனாமியில் பலியானவர்களுக்கு உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

குழித்துறை, டிச.26- கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாட்டில் சுனாமியில் பலியானவர்களுக்கு உறவி னர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2004 ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட ஆழிப் பேரலை (சுனாமி) யின் போது கொட்டில்பாட்டில் சுனாமி தாக்குதலில் குழந்தை கள் உள்பட 199 பேர் பலியாயி னர்.இவர்களின் நினைவாக புனித அல்லேசியார் ஆலய வளா கத்தில் நினைவு தூண் அமைக்கப் பட்டுள்ளது. சுனாமி தாக்குதலின் 17 வது ஆண்டு நினைவு நாளை முன் னிட்டு ஞாயிறன்று கொட்டில்பாடு மீனவர்கள் சுனாமி காலனியிலி ருந்து பங்குத்தந்தை ராஜ் தலை மையில் கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி கல்லறை தோட்டம் வரை மவுன ஊர்வலம் சென்ற னர். இறந்தவர்களின் கல்லறை களில் உறவினர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கொட்டில்பாடு புனித அல்லேசியார் ஆலயத்தில் சிறப்பு நினைவு திருப்பலி நடந் தது. இதில் அருட்சகோதரிகள் உள்பட திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மீனவர்கள் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.