districts

img

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் ஓய்வூதியர் தின கருத்தரங்கில் வலியுறுத்தல்

மதுரை, டிச.17-  மதுரை மாவட்ட மத்திய - மாநில  அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூ தியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் டிசம்பர் 17  செவ்வாயன்று ஓய்வூதியர் தின  கருத்தரங்கம் காந்தி மியூசியம் எதி ரில் உள்ள பூங்கா முருகன் திரு மண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் வி.பிச்சைராஜன் தலை மை வகித்தார். மாவட்டச் செயலா ளர் அ.பால்முருகன் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத்  தலைவர் முனைவர் சு.கிருஷ் ணன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணை பொதுச்  செயலாளர் ஆர்.தேவராஜ், தமிழ் நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாவட்டத் தலைவர் ஆர்.மாரிச்சாமி, அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூ தியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பாண்டியன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் சி.செல்வின் சத்தியராஜ், தெட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர்  ஆர். சங்கரநாராயணன் ஆகியோர் “எனது துறையும் - ஓய்வூதியமும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினர்.

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதி யர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் என். ஜெயச்சந் திரன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் பேரா. ஆர்.சங்கரி  ஓய்வூதியமும் - மத்திய மாநில அரசு களின் நிலையும் என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு துணைத் தலை வர் ஆர்.முருகேசன் நன்றி கூறி னார்.

கருத்தரங்கில் அரசு துறை ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வாழ்த்துரை வழங்கி அனைத்து  ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பு மாநிலச் செயலாளர் என்.ஜெயச்சந்திரன் பேசியதாவது:

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில்வேயில் மூத்த குடி மக்களுக்கான சலுகைகள் நிறுத்  தப்பட்டது இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் மற்றும் அமைச்சகத்திடம் கேட்டால், அந்தியோதயா போன்ற புதிய  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரு கிறது. இவற்றில் கூடுதல் கட்டணம்  மற்றும் உணவுகள் வழங்கப்படு கிறது. இவற்றை பராமரிக்க பணி யாற்றும் ஊழியர்கள் ஒப்பந்த  முறையில் பணியமரத்தப்பட்டுள்ள னர். எனவே அவர்களுக்கு ஊதி யம் போன்ற செலவுகள் உள்ளதால்  மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது- ஆனால்  ரயில்வேயில் பல்லாயிரக்கணக் கான காலியிடங்கள் உள்ளன. லட்  சக்கணக்கான இளைஞர்கள் படித்து வேலையில்லாமல் உள் ளார்கள். அப்பணியிடங்களை நிரப்புவதற்கும் மூத்த குடிமக்க ளுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவதற்கும் ரயில்வே நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

மாநிலச் செயலாளர் ஆர்.சங்  கரி பேசுகையில், “நாம் பெற்ற  ஓய்வூதியத்தை பாதுகாக்க வேண்  டும். புதிதாக பணியில் சேர்ந்த வர்களின் ஓய்வூதியத்திற்காகவும் நாம் போராட வேண்டும். டிசம்பர்  17 ஓய்வூதியர் தினமாக இந்தியா வில் கடைப்பிடித்து வருகின்றோம்.  நாகராஜன் என்பவர் ஓய்வூதியம் வழங்குவது குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந் தார். அந்த வழக்கில் 1982 ஆம்  ஆண்டு டிசம்பர் 17 உயர்நீதிமன்ற  நீதிபதி யஸ்வந்த் சந்திர சூட் அன்  றைக்கு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற அந்த மகத்தான தீர்ப்பை வழங்கினார். நாம் அந்த ஓய்வூ தியத்தை பாதுகாத்திட வேண்டும். இந்தியா மட்டுமல்ல உலகம் முழு வதும் ஓய்வூதியத்தை குறைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இன்றைக்கு இருக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவைகளுக்கு ஏற்றதாக ஓய்வூதியம் இல்லை. எனவே ஊதிய உயர்வு ஏற்படும் போது ஓய்  வூதியம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் அன்றைக்கு இருந்த ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசு வருவாயில் பெரும் பகுதியை ஓய்வூதியத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். அதை குறைக்க வேண்டும் என்று கூறி னார்கள். இன்றைக்கும் இந்தியா வில் ஒரு ஆய்வு அறிக்கை கூறு கிறது 65% முதியோர்கள் பராமரிப்பு இல்லாமல் அனாதையாக விடப்  படுகிறார்கள் என்றும், இதில் தமிழகம் இரண்டாவது இடத்தில்  இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் மக்கள் நல்  வாழ்வுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைவாக உள்ளது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாத்திட ஒதுக்கப்படும் நிதி  அதிகரித்துள்ளது என்றும் ஆய்வு கள் கூறுகிறது. எனவே புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூ திய திட்டம் கிடைத்திட வேண்டும் அதற்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்று இந்த ஓய்வூதி யர் தின நாளில் கேட்டுக்கொள்கி றேன் என்று பேசினார்.