மேதினமும்-தீக்கதிரும்
ஊடக உலகின் உண்மையின் பேரொளியாக திகழும் தீக்கதிர் நாளிதழுக்கு தொழிலாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி அன்று மதுரை நகர உழைப்பாளி மக்கள் தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா வழங்கி பெருமை சேர்த்தனர். மதுரை மத்திய-2ஆம் பகுதிக்குழு சார்பில் தீக்கதிர் மதுரைப் பதிப்பு பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரனிடம் 26 தீக்கதிருக்கான சந்தா ரூ. 33 ஆயிரத்தை கே.எஸ்.ராஜா வழங்கினார். வடக்கு 1-ஆம் பகுதிக்குழு அசோக் நகர் திரு.வி.கா தெருவில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி மாவட்ட குழு உறுப்பினர் பி.ராதாவிடம் 26 தீக்கதிர் சந்தா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.
மதுரை, மே 1- உலகப் புகழ் பெற்ற மதுரை சித்தி ரைத் திருவிழாவையொட்டி மதுரை நகரம் திருவிழாக்கோலம் பூண்டுள் ளது. சித்திரைத் திருவிழாவின் முத் தாய்ப்பான முதல் நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு முன்னதாக மே 1-ஆம் தேதி மதுரை நகரம் மட்டுமல்ல மதுரை மாவட்டம் முழுவதும் செங் கொடிகளாக காட்சியளித்தது என்றால் மிகையல்ல. உழைப்பாளி மக்களோடு இரண்டறக் கலந்து நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-இந்திய தொழிற் சங்க மையம் இணைந்து உலகத் தொழி லாளர்களே ஒன்று சேருங்கள். வானில் செங்கொடி உயரட்டும்... தொழிலாளர்- விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக... தொழி லாளர்களைப் பாதுகாப்போம்... தொழிற் சங்கத்தைப் பாதுகாப்போம் என்று 137-ஆவது மேதினத்தை உணர் வுப்பூர்வமாகவும் அர்த்தப்பூர்வமாக வும் கொண்டாடின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் மே தின கொடியேற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், அ.ரமேஷ், வை.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெத்தானியாபுரம் தூக்கு மேடை தியாகி பாலு படிப்பகத்தில் உள்ள மே தின நூற்றாண்டு கொடிமரம், பாக்டி ரிஸ் லூமூம்பா படிப்பகம், மேட்டுத் தெரு, மாடக்குளம், பைகாரா, பழங்கா நத்தம் உள்ளிட்ட 27 இடங்களில் மேதின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. லெனின், பகுதிக்குழு செயலாளர் கு. கணேசன், ஏ.பி.சிவ ராமன், பி.மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காஸ்ட்ரோ, கார்க்கி, தூக்கு மேடை தியாகி பாலு படிப்பகம் உள்ளிட்ட 31 இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், பகுதிக்குழு செயலாளர் வை.ஸ்டாலின், ஏ.பாண்டி, மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். சிம்மக்கல் வெகுஜன மற்றும் பொது ஜன, பத்மாசினி படிப்பகம் உள்ளிட்ட 29 இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது சிம்மக்கல் கிளைச் செய லாளர் காளிதாஸ், மணிகண்டன், என். நிரூபனா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினரும் தீக்கதிர் பொறுப்பாசிரிய ருமான எஸ்.பி.ராஜேந்திரன் கொடி யேற்றினார். பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர் பி. கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். சக்கரை செட்டியார் படிப்பகம், தியாகி மாரி, மணவாளன் படிப்பகம் உள்ளிட்ட 31 இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வசந்தன், பகுதிக்குழுச் செயலாளர் ஏ.பாலு, துணைமேயர் டி. நாகராஜன், எஸ். வேல்தேவா உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், சோலை அழகுபுரம், முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிளைகள் சார்பில் 21 இடங்ககளில் கொடியேற் றப்பட்டது. பகுதிக்குழு செயலாளர் ஏ.எஸ்.செந்தில் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் துணை மேயர் தி.நாக ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் டி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தெற்கு பகுதிக்குழு சார்பில் முனிச் சாலை, அனுப்பானடி உள்ளிட்ட பல் வேறு இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறறது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நர சிம்மன், எம்.பாலசுப்பிரமணியன், பகு திக்குழுச் செயலாளர் ஜெ.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் கே.கண் ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வடக்கு முதலாம் பகுதிக்குழு கிளை கள் சார்பில் 20 மையங்களில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். சசிகலா, செயலாளர் வி.கோட் டைச்சாமி, தீக்கதிர் இடைக்கமிட்டி ஜோ. ராஜ்மோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராதா, என்.ஜெயச் சந்திரன், மாமன்ற உறுப்பினர் டி.குமர வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிஐடியு சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார் பில் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கொடி யேற்று நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சி.சுப்பையா மே தினக் கொடி யை ஏற்றினார். மாவட்டச் செயலாளர் இரா.லெனின், பொருளாளர் ஜே.லூர்து ரூபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர். போக்குவரத்து, சாலையோர வியா பாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள், சுமைப் பணி தொழிலாளர்கள், மாநக ராட்சித் தொழிலாளர் சங்கங்கள் சார் பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற் றது.
அப்பளத் தொழிலாளர்கள்
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அப்ப ளத் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் மேதினக் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்விற்கு தொழிலா ளர்கள் சங்க செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.