இராமநாதபுரம், ஜூன் 14- இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், எக்க குடி கிராமத்தில் ஜூன் 14 அன்று வருவாய் மற்றும் பேரி டர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், பொதுமக்களி டமிருந்து 120 மனுக்களை பெற்று 102 பயனாளிகளுக்கு ரூ.35.17 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி களை வழங்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் முத்துக்குமார் , இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றி யக் குழுத்தலைவர் புல்லாணி ஊராட்சி மன்றத் தலைவர்கள் அக்பர் அலி (எக்ககுடி) , குமார்(கொத்தங் குளம்) அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.