திருநெல்வேலி ,ஆக .23- பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரி யர்களை பாதுகாத்திடவும், கல்லூரியில் தமிழ்நாடு அரசு ஆணைகளை பின்பற்றி நடந்திடக் கோரியும் மூட்டா சங்கத்தின் சார்பில் பேரணி நடைபெற்றது. பாளையங்கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி தெற்கு பஜார் லூர்து நாதன் சிலையில் நிறைவுற்றது. பேரணிக்கு சங்கத்தின் மூன் றாம் மண்டலத் தலைவர் ஹெய்ஸ் தாசன் தலைமை தாங்கினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்டப் பொதுச் செய லாளர் முத்துக்குமாரசாமி தொ டக்கவுரை நிகழ்த்தினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மணிமேகலை வாழ்த்திப் பேசினார். மூட்டாவின் முன்னாள் தலை வர் ராதாகிருஷ்ணன் , மூட்டாவின் பொருளாளர் ராஜசெயசேகர் கோ ரிக்கைகளை விளக்கிப் பேசினர். மூட்டாவின்பொதுச்செயலாளர் மு.நாகராஜன் நிறைவுரையாற்றி னார். பேரணியில் 300 பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.