தேனி, ஜூன் 3- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராஜாக்காள் பட்டி ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது.இந்த பகுதி யில் வசிக்கும் மலைவாழ் மக்களை சேர்ந்தவர்கள், சீனி என்பவரின் மகன் பட்டவராயன்(16), வேல்முருகன் என்பவ ரின் மகன் ஞானவேல் (15), ரவி என்பவரின் மகன் தமிழ ரசன் (14) ஆகிய மூன்று சிறுவர்கள். இவர்களை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த இருவர் மத்தி யப்பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதிக்கு இட்லி கடைக்கு வேலைக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளனர். 15 நாட்களுக்கு முன் அந்த சிறுவர்கள் மாய மாகினர். சிறுவர்களின் பெற்றோர்கள் ராஜதானி காவல்நிலை யத்தில் புகார் அளித்தனர். ராஜதானி காவல் ஆய்வாளர் சத்தியபிரபா, சார்பு ஆய்வாளர் முஜிபுர் ரஹ்மான், தலை மை காவலர் தங்கப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவர்களை மீட்க மத்திய பிரதேசத் திற்கு விரைந்தனர். விசாரணையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்திலிருந்து 340 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் மூன்று சிறுவர்களும் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று மூன்று சிறுவர்களையும் மீட்டனர். அந்த சிறுவர்கள் ஆண்டி பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர் .