இராஜபாளையம், டிச.11- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தாமதமாவ தால், தென்காசி தேசிய நெடுஞ் சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற் றும் வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பணிகளை விரைந்து முடிக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இராஜபாளையம் நகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலப் பணி கள், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற மூன்று பணிகளும் ஒரே சமயத்தில் துவக்கப்பட்டன. இதன் காரணமாக இராஜ பாளையம் நகர் பகுதியில் உள்ள 42 வார்டுகளிலும் சாலைகள் மிக வும் மோசமான முறையில் சிதைக் கப்பட்டுள்ளன. பிரதான வீதிகள் தவிர இதர வீதிகள், குறுகலான தெருக்கள் போன்ற பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்களும், ஆட்டோ போன்ற வாகனங்களும் சென்று வர வேண்டிய அவல நிலையே உள்ளது.
இராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலை வழியாக ஸ்ரீரங்க பாளையம், சத்திரப்பட்டி சாலை சென்று தென்காசி தேசிய நெடுஞ்சாலையை அடைய வேண்டிய நிலையில், ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் சத்திரப்பட்டி சாலை யின் குறுக்கே உள்ள ரயில்வே கேட் கடந்த 3 ஆண்டுகளாக செயல் படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக கணபதி புரம் ரயில்வே கேட் பாலம் வழி யாக இருசக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் இச்சாலை மேடு, பள்ளமாகவும், சகதி நிறைந்ததாகவும் உள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் பல இடங்களில் அப்ப டியே உள்ளன. மூன்று பணிகளும் எப்போது முடியுமோ என்ற கலக் கத்தில் இராஜபாளையம் பொது மக்கள் உள்ளனர். எனவே, உடனடியாக பணி களை முடித்து புதிதாக சாலை அமைத்து போக்குவரத்திற்கு வழிவகை செய்யுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.