districts

img

ஆண்டிபட்டியில் சூறைக்காற்றுடன் மழை பழமையான மரம் சாய்ந்து கார் சேதம்

தேனி, மே 29- தேனி மாவட்டம் ஆண்டி பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கட்கிழமை காலை முதல் வெயில் தாக்  கம் அதிகரித்து காணப்பட்  டது. இந்த நிலையில் பிற்ப கல் மூன்று மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. சூறைக் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் ஆண்டி பட்டி அருகே உள்ள சக் கம்பட்டி, திருவள்ளுவர் காலனி பகுதியில் நூறு ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்து,  அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த ஒரு காரின் மீது விழுந்  தது. இதில் அந்தக் கார் முற்றி லும் சேதமடைந்தது.  சக்கம்பட்டி முத்துமாரி யம்மன் கோவில் பகுதியில் உள்ள சில வீடுகளின் கதவு கள் மற்றும் மேற்கூரை தக ரங்களும் காற்றில் பறந்து  விழுந்தது. சக்கம்பட்டி பகு தியில் பத்துக்கும் மேற்பட்ட  மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்தது. 10-ஆவது வார்டு  புதுமேலத்தெருவில்‌ மரக் கிளைகள் மின்சார வயரின் மீது விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்தது. இதன் காரண மாக சக்கம்பட்டி பகுதியில்  மின்சார விநியோகம் முற்றி லுமாக துண்டிக்கப்பட்டது. சக்கம்பட்டி பகுதியில் ஏராள மான மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்துள்ளதால் மின் விநி யோகத்தை சீரமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த  மழையால் சக்கம்பட்டி குடி யிருப்பு பகுதிகள் அனைத் தும் உருக்குலைந்து காணப்பட்டது.