கோவை, மார்ச் 8- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.வெங்கிடுவின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று அனுசரிக் கப்பட்டது. ஒன்றுபட்ட கோவை மாவட்ட செய லாளர், மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் களப்பணியாற்றி, உழைக்கும் மக்களின் நம்பிக்கையை பெற்றவர் தோழர் ஆர்.வெங்கிடு. இவருடைய நினைவு நாள் மார்ச் 7 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் உடையாம்பாளையத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் யு.கே.வெள்ளிங்கிரி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோபால், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் பி.ராம மூர்த்தி, சுமதி மற்றும் ஆர்.வெங்கிடு குடும் பத்தார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினர்.