தேனி, ஜூலை 1- தேவதானப்பட்டியில் தூய்மை காவலர்கள், கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி யிடம் தீக்கதிர் சந்தா தொகையினை வழங்கினர். தேனி மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் தாலுகா குழு சார்பில் தேவதானப்பட்டியில் சனிக்கிழமை சந்தா சேகரிப்பு பணி நடைபெற்றது .கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ,மாவட்டச் செய லாளர் ஏ.வி . அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் .வெண்மணி , மாவட்டக்குழு உறுப்பி னர்கள் இளங்கோவன், பிரேம்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.