மதுரை, ஜூலை 2- பஞ்சமி நிலங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பஞ்சமி நில மீட்பு கூட்டியக்கம் வலி யுறுத்தியுள்ளது. பஞ்சமி நில மீட்பு கூட்டி யக்கம் சார்பாக மதுரை மூட்டா அலுவலகத்தில் சனிக்கிழ மையன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டி யக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் ச.கருப்பையா தலைமை வகித்தார். தமிழ நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் விடுதலை இயக்கம், தமிழ்தேச மக்கள் முன்னணி, தாயக மக்கள் கட்சி,மக்கள் தமிழகம் கட்சி, தமிழ்தேச குடியரசு இயக் கம், மக்கள் தேசம் கட்சி, பெண்கள் இணைப்புக்குழு போன்ற 28 அமைப்புகள் பங்கேற்றன. இக்கூட்டத்தில் பஞ்சமி நிலம், நில உச்சவரம்பு நிலம், பூமி தான நிலம், மானிய நிலங்கள், நில குடியேற்ற சங்க நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் உள்ள பட்டி யல், பழங்குடியின மக்க ளுக்கான உரிமைகளும் நில மில்லாத ஏழை கூலித் தொழி லாளர்களுக்கான உரிமை யும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கோவில் நிலங் கள், மடாதிபதிகளின் கட்டுப் பாட்டில் உள்ள நிலங்களில் மக்களுக்கான பங்கு களை பெறுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டது. இறுதியாக கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மதுரையில் பஞ்சமி நில உரிமை மீட்பு மாநாட்டை நடத்துவது, பஞ்சமி நிலங் கள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும். தமிழக வரு வாய்த் துறை அமைச்சரால் கண்டறியப்பட்டு, சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலங்களை அரசு உடனடி யாக உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை பாது காக்கவும், தனி நபர் ஆக்கி ரமிப்பில் இருந்து நிலங் களை மீட்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண் டும் என்று வலியுறுத்தப் பட்டது.