விருதுநகர், டிச.9- விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கு வதற்கான வாக்காளர் பட்டியல்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பெற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் 5 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நகராட்சிகளில் 398ம், பேரூராட்சிகளில் 153 என மொத்தம் 551 வாக்குக் சாவடி களுக்கான வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சியில் 74,679 வாக்காளர்களும், இராஜபாளை யத்தில் 1,14,828, சாத்தூரில் 25,333, திரு வில்லிபுத்தூரில் 68,561, விருதுநகரில் 62,494 என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயி ரத்து 895 வாக்காளர்கள் உள்ளனர். செட்டியார்பட்டி பேரூராட்சியில் 15,148 வாக்காளர்களும், காரியாபட்டியில் 14,673, மல்லாங்கிணறில் 10,308, மம்சாபுரத்தில் 16,558, எஸ்.கொடிக்குளம் 11,245, சேத்தூ ரில் 17,373, சுந்தரபாண்டியம் 7,483, வ. புதுப்பட்டி 6,811, வத்ராப் 14,148 என மொத் தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 747 வாக் காளர்கள் உள்ளனர்.