districts

img

ம.காமுத்துரை எழுதிய நாவல் வெளியீடு

தேனியில் தமுஎகச அல்லிநகரம் நகர்க்கிளை சார்பில்  விழாவிற்கு ந.சேதுராம் தலைமை வகித்தார். சங்கத்தின் மூத்த  உறுப்பினர் பா.ராமமூர்த்தி வரவேற்றார். கொடி வழி நாவலை கவிஞர் இரா.ஜெகதீசன் வெளியிட தேனி மாவட்டம்  முதன்மை கல்வி நேர்முக மேல்நிலை உதவியாளர் ரா.மணிவண்ணன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் தேனிசீருடையான் நூல் அறிமுகம் செய்து பேசினார். காமுத்துரையின் காரான் சிறுகதை தொகுப்பு குறித்து  பொறியாளர் எஸ்.எஸ்.பொன்முடி உரையாற்றினார். தமுஎகசவின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம்  கொடி வழி  நாவலை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார். சௌந்தரபாண்டியன், அன்பு வடிவேலு, மாநிலக் குழு உறுப்பினர் கம்பம் சிவாஜி, தபால் அலுவலக அதிகாரி சீ.மோகன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காமுத்துரை வசனம் எழுதிய ‘ஹர்காரா’ திரைப்படம் முன்னோட்டம் திரையிடப்பட்டது. தொலைக்காட்சி வசனகர்த்தா நந்தன் ஸ்ரீதரன் துவங்கி வைத்தார். செப்டம்பர் மாதம் இரண்டாம் நாள் சென்னையில் நடைபெற உள்ள சனாதன ஒழிப்பு மாநாடு அழைப்பிதழ் வெளி யிடப்பட்டது. மாவட்டச் செயலாளர் அய்.தமிழ்மணி, நூலாசிரியர் எழுத்தாளர் ம.காமுத்துரை, எஸ்.எல்.சுபபுராஜ், எழுத்தாளர்  அல்லிஉதயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.