மதுரை, ஜூலை 3- மக்கள் நலப் பணியாளர்கள் மீண் டும் வேலை உறுதித்திட்ட ஒருங்கி ணைப்பாளராக வேலையில் சேரும் பொழுது, மக்கள் நல பணியாளராக பணிபுரிந்த முந்தைய காலத்திற்கான முன்னுரிமை, பணித்தொடர்ச்சி ஏதும் கோரமாட்டேன்,முந்தைய பணப்பலன் கள் கோரமாட்டேன் என சம்மதம் தெரி விக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள் ளது. இதற்கு தமிழ்நாடு கிராம வளர்ச்சி- பஞ்சாயத்து துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க வேண் டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மேலூரை சேர்ந்த ரவி, தேனியை சேர்ந்த மணி வேலன், சிவகங்கையை சேர்ந்த செல் வம் ஆகியோர் தாக்கல் செய்த மனு வில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அவர்கள் வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பா ளராக பணியமர்த்தப்படுவர் என்றும், மதிப்பூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட் டது.
இதன் அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு,விதிகளுக்கு உட்பட்டு பணி வழங்கப்படுகிறது. 8.11.2011 அன்று பணியிழந்த முன் னாள் மக்கள் நலப் பணியாளர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் எனும் பணியிடத்தில் பணியில் சேர்வதற்கான ஒரு சம்மத கடிதம் எழுதி பணியில் சேரும் மக்கள் நலப்பணியாளர்கள் கை யொப்பம் இட்டு வழங்க வேண்டும். அதில், அத்தகைய நிபந்தனை களுக்குட்பட்டு மேற்காணும் பணியில் பணிபுரிய சம்மதம் தெரிவிக்கின்றேன் . மேலும் நான் மக்கள் நலப் பணியாள ராக பணிபுரிந்த முந்தைய காலத்திற் கான முன்னுரிமை, பணித்தொடர்ச்சி மற்றும் முந்தைய பணிக்கால பணப் பயன்கள் ஏதும் கோரமாட்டேன் என வும் சம்மதம் தெரிவிக்கின்றேன் என கையெழுத்து இட வேண்டும் என்று உள் ளது. இது ஏற்புடையது அல்ல. இவ் வாறு நிபந்தனையுடன் சம்மதம் கேட்கும் உத்தரவை ரத்து செய்து உத்தர விட வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த மனு மீதான விசாரண நீதிபதி ரமேஷ் முன்பு நடைபெற்றது. அப் போது, இது குறித்து கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலாளர், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.