திருவில்லிபுத்தூர், ஆக.10- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் விழுப்பனூர் ஊராட்சி நாச்சியார்புரம் கிரா மத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.மான்ராஜ் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், 373 பயனாளிகளுக்கு ரூ.54.62 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் வழங்கினார். முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலை வர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தனித்துறை ஆட்சியர் (ச.பா.தி) அனிதா, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர்விஸ்வநாதன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் கூனம்பட்டி ராஜ் விழுப்ப னூர் தமிழ்செல்வன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.