பழனி மார்ச் 28- மக்கள் விரோத மோடி அரசைக் கண்டித்து சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஏப்ரல் 5 அன்று நடைபெறவுள்ள தில்லி பேரணியை விளக்கி பழனியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடை பெற்றது. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பேராசிரியர் சோ மோகனா ,சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் எம். ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே அருட்செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் கமலக்கண் ணன், நகர்மன்ற துணைத் தலைவர் கே.கந்தசாமி ஆகி யோர் பேசினர்.