districts

img

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் ஜூன் 6 அன்று நடைபெற்றது. 73 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது. இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபுர் ரகுமான், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.