districts

img

விபத்தில் பலி: முதல்வர் நிவாரண நிதி வழங்கல்

இராமநாதபுரம், ஆக.26- கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி யிலிருந்து நிதி வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் சின்ன மாயாகுளம் விவே கானந்தபுரம் பகுதியைச் சார்ந்த பார்வதி, குப்பம்மாள் ஆகியோர் ஆகஸ்ட் 14 அன்று முகம்மது சதக் பாலி டெக்னிக் கல்லூரி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் சிக்கி உயிரிழந்தனர்.  தமிழ்நாடு முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தா ருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.  இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு  சென்ற மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், இராம நாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் ஆகியோர் ரூ.2 லட்சத்திற்கான காசோலை களை அவர்களது குடும்பத்தாரிடம் சனிக்கிழமையன்று (ஆக.26)வழங்கினர்.  இராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் ஆர்.கே. கார்மேகம், கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் ஆகி யோர் உடனிருந்தனர்.