திருநெல்வேலி, அக். 26- பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப் பட்டன. விழாவிற்கு கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாலமன் டேவிட் வரவேற்று பேசினார். பாளை யங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கலந்துகொண்டு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார், சிறப்பு விருந்தினர்களாக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து ஜெகதீஸ், சிஎஸ்ஐ நெல்லை திருமண்டல பொருளாளர் மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர், தச்சை மண்டல தலைவர் ரேவதி பிரபு, மாவட்ட கவுன்சிலர் கனகராஜ் , பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாமுவேல் பாஸ்கர்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் டேனியல் உதவி தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஞானதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.