districts

மதுரை முக்கிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

சிவகங்கை, ஜூலை 19- திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுவின் 20-ஆம் ஆண்டு விழா மானாமதுரையில் நடைபெற்றது.  இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்  வழங்கப் பட்டது. அமைப்பின் தலைவர் தலைவர் பாரதி அச்சகம் தேவ தாஸ், நாகலிங்கம்  அடைக்கலம்,  செர்டு இயக்குநர் டாக்டர் பாண்டி, வாகுடி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் முரு கன், வேதியரேந்தல் தலைமை ஆசிரியர் சபரிராஜன், ஆசிரியர் சக்கரவர்த்தி, மண்பாண்ட கூட்டுறவு சங்கத்  தலைவர் லெட்சுமணன், மானாமதுரை நகர்மன்ற உறுப்பி னர் நதியா, சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காலமானார்

சின்னாளபட்டி, ஜூலை 19- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சிறப்பு நிலைப்  பேருராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரி பவர் சரவணன். இவரது தாயார் ராஜம்மாள் திங்களன்று  காலமானார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து துப்புர வுப் பணியாளர்கள் உள்ளாட்சி சம்மேளன ஒன்றிய கன்வீ னர் வி.கே.முருகன்,  ரஜினி செல்வம், சக்திவேல், சின்னாள பட்டி பேருராட்சி செயல் அலுவலர் நந்தகுமார், தலைமை  எழுத்தர் கலியமூரத்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன்,  பேரூராட்சித் தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜம்  மாள் உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தி னர்.

கஞ்சா பறிமுதல்

திருவில்லிபுத்தூர், ஜூலை 19-  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்தியலிங்க புரத்தைச் சேர்ந்த கருப்பாயி (49). இவரது மகன் முனிய சாமி (31) இருவரும் தங்கள் வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்துள்ளனர். இதையறிந்த வன்னியம்பட்டி காவல் துறையினர் அவர்களது வீட்டிற்குச் சென்று 1,200  கிராம் கஞ்சாவை கைப்பற்றி இருவரையும் கைது செய்த னர். 

ஆடு திருடியவர் ஓட்டம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 19- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி யைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (65) இவர் தனது  ஐந்து ஆட்டுக்குட்டிகளை சாலை ஓரங்களில் மேய்த்துள்  ளார். பிற்பகல் இரண்டு மணியளவில் கார் ஒன்றில் வந்த  ஒருவர் ஒரு ஆட்டை தூக்கிச் சென்றுவிட்டார். கிருஷ்ணம்  மாள் அளித்த புகாரின் பேரில் ஆட்டையும், காரையும் தேடி  வருகின்றனர் காவல்துறையினர். 

மண் திருட்டு

இராஜபாளையம், ஜூலை 19-  இராஜபாளையத்தை அடுத்துள்ள அழகாபுரி ரயில்வே கேட் அருகே காலாவதியான அனுமதிச்சீட்டைப் பயன்படுத்தி டிராக்டரில் மண் அள்ளி வந்த திருவில்லி புத்தூர் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் நவீன்குமாரை காவல்துறையினர் கைது செய்த னர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பறிமுதல்

திருவில்லிபுத்தூர், ஜூலை 19- திருவில்லிபுத்தூரை அடுத்துள்ள கொத்தங்குளத் தைச் சேர்ந்த கருப்பசாமி (28), திருவில்லிபுத்தூர் முடுக்குத்  தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (41) ஆகியோரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை 28 கிலோவை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களை கைது  செய்தனர்.

சாலை விபத்து; ஒருவர் பலி

விருதுநகர், ஜூலை 19- விருதுநகர் அருகே உள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த வர் காளியப்பன் (45). பட்டாசு தொழிலாளியான இவர் இரு சக்கர வாகனத்தில் கன்னிசேரியிலிருந்து நாராணாபுரம் சென்று கொண்டிருந்தார். அவ்வழியே வந்த வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டது. படுகாயமடைந்த காளியப்பன் விருதுநகர் அரசு மருத்  துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர்  அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காளியப்பன் மனைவி பாண்  டியம்மாள் (44) கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப் பட்டி காவல்துறையினர் விசாரித்தனர்.

கழுத்தறுத்து ஒருவர் கொலை 

விருதுநகர், ஜூலை 19- சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக சாத்தூர் தாலுகா காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற  காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையானவர், சின்னகொல் லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவானிகுமார் (45) என்ப தும், இவர் அப்பகுதியில் லாரிகளில் சரக்கு ஏற்றும் முக வராக வேலை செய்ததும் தெரியவந்தது. கோவில்பட்டி மந்தித்தோப்புப் பகுதியைச் சேர்ந்த  செல்வம் (48) என்பவரும், பவானிகுமாரும் சேர்ந்து மது  அருந்திய போது ஏற்பட்ட தகராறில் செல்வம், பவானிகுமா ரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. செல்வம் கைது செய்யப்பட்டார்.

கரடி தாக்கி இருவர் காயம்

கடமலைக்குண்டு, ஜூலை 19- தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள மஞ்ச னூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் மஞ்ச னூத்து அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்.  திங்கள்கிழமை இரவு மகாலிங்கம் மற்றும் அவரது மனைவி லட்சுமி, மருமகள் லிதியாள் ஆகியோர் தூங்கிக்  கொண்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து  மணியளவில் மஞ்சனூத்து வனப்பகுதியிலிருந்து இரை தேடி வந்த கரடி லட்சுமியை தாக்கி விட்டு வீட்டிற்குள் சென்றது. வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த லிதியாளை யும் கரடி தாக்கியது. இவர்கள் எழுப்பிய சத்தத்தில் கரடி ஓடிவிட்டது. கரடி தாக்கியதில் காயமடைந்த லட்சுமி, லிதி யாள் இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வருஷநாடு வனத்துறையினர் விசாரித்தனர்.

விவசாயிகள் சங்க  திருவாடானை தாலுகா மாநாடு

இராமநாதபுரம், ஜூலை 19- தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாடானை தாலுகா எட்டாவது மாநாடு ஏ. செந்தில்குமார் தலைமையில்  நடை பெற்றது. கே.டி.போஸ் கொடியேற்றினார். எஸ்.ஏ.சந்தா னம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டச் செய லாளர் வி.மயில்வாகனன் மாநாட்டை துவக்கி வைத்தார்.  தோட்டா மங்கலம் கே.ராசு வேலை அறிக்கை சமர்ப்பித்  தார். விதொச தாலுகா செயலாளர் ஆர். சேதுராமு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கே.ஜெயகாந்தன், கே.தனபால் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தலைவர் எம். முத்துராமு நிறைவுரையாற்றி னார்  நிர்வாகிகள் தேர்வு: தாலுகா தலைவர் பி.இராம நாதன், செயலாளர் தோட்டமங்கலம் கே.ராசு, பொருளா ளர் என்.பாலுசாமி, துணைத் தலைவர் கே.டி.போஸ், துணைச் செயலாளர் பாண்டியராஜன்.  மாநாட்டில் ஆர்.எஸ்.மங்கலத்தில் அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அமைப்புக்குழு செயலாளராக பி.சகாதேவன், உறுப்பினர்களாக ஏ. செந்தில்குமார், எஸ்.ஏ.சந்தானம், ஆறுமுகம், கே.முருகன் தேர்வு செய்  யப்பட்டனர்.  தட்டுப்பாடின்றி கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம்  வழங்க வேண்டும்.  விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய காலத்தில் விவசாயக் கடன்  வழங்க வேண்டும். எட்டுக்குடி, அஞ்சு கோட்டை,  திருத்தேர்வளை, சிறுகம்பையூர் கூட்டுறவு  கடன் சங்கங்களில் கடன் தள்ளுபடி ரசீது வழங்கி புதி தாக விவசாயக் கடன் வழங்க வேண்டும்.   என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாளையங்கோட்டை, வீரக்கல் ஊராட்சித் தலைவர்கள் மீது புகார்

சின்னாளப்பட்டி, ஜூலை 19- திண்டுக்கல் மாவட்டம் பாளையங்கோட்டை மற்றும்  வீரக்கல் ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலை வருக்கு எதிராக வார்டு உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா  தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். பாளையங்கோட்டை ஊராட்சித் தலைவர் அழகு மலை, துணைத் தலைவர்  நாகவள்ளி. இவர்கள் ஊராட்சி  அலுவலகத்திற்கு வருவதில்லை, ஊராட்சியில் நடை பெறும் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை,  நிர்வாகப்  பணிகளில் துணைத்தலைவர் நாகவள்ளியின் கணவர் தலையீடு உள்ளது எனக் குற்றம் சாட்டி, நாகவள்ளி மீது  நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை கோரி கலைராணி, முனிச்செல்வம், அனுசியா, சீனியம் மாள், அழகுமலை மற்றும் காயத்திரி ஆகிய  வார்டு உறுப்பினர்கள் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழு மலையானிடம்  மனு அளித்தனர்.  வீரக்கல் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி. இவர் ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் செய்வதில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார். வார்டு உறுப்பினர்கள் யாரிடமும் எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி  ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் எட்டு வார்டு உறுப்பினர்கள் மனு அளித்தனர்.  இரண்டு மனுக்களையும் விசாரித்த வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப்பதாகக் கூறியுள்ளார்.

பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது

சிவகங்கை, ஜூலை 19- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஆசிரியர்கள் ஆல்பர்ட்  ஆபிரகாம், பால்ராஜ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆசிரியர் ஆல்பர்ட் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்  பட்டவர்களின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்து ராமலிங்க பூபதி, ஒன்றியச் செயலாளர் ஆண்டி, முனிய ராஜ், ராஜாராமன், முத்துக்கருப்பன் ஆகியோர் சந்தித்து  ஆறுதல் கூறி தைரியமூட்டினர். பாலியல் கொடுமையைக் கண்டித்து மானாமதுரை யில் ஜூலை 25-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இருவருக்கு கத்திக்குத்து 

தேனி, ஜூலை 19- போடி அம்மாபட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்தவர்  ரஞ்சித்(38). இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திரு மணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு  அவரது மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். தேவாரத்தில் இருந்தபோது தனது மகளைப் பார்ப்பதற்காக ரஞ்சித் அடிக்கடி செல்வது  வழக்கம். சம்பவத்தன்று தனது மகளை ரஞ்சித் பார்க்கச்  சென்றபோது மனைவியின் குடும்பத்தினர் பார்க்கவிடா மல் தடுத்து தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்குள்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் எனது குடும்பம் பிரிந்ததற்கு நீங்கள் தான் கார ணம் எனக் கூறி போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த  முத்தையா(45) என்பவரை கத்தியால் குத்தினார். இதைத்  தடுக்க வந்த கண்ணன்(45) என்பவரையும் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழனி, ஜூலை 19-  பழனி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை நகராட்சி  அலுவலர்கள் அப்புறப்படுத்தினர். பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் வெளி யூர் பேருந்துகள், கிழக்குப் பகுதியில் நகர்ப் பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு கடைகள் ஒதுக்கப்பட்ட இடத்தில் அதிகப் பொருட்கள் வைத்தும், தடுப்புகளை அமைத்தும் ஆக்கிரமித்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் பல முறை அறிவிப்பு வெளி யிட்டும் அகற்றப்படவில்லை. ஆணையர் கமலா தலை மையில் அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டனர். கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஒருதலை பட்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தாக கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி ஆக்கிர மிப்புகளை அகற்றினர்.

நகை திருட்டு

விருதுநகர், ஜூலை 19- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37).  இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  எனவே, வீட்டை பூட்டிவிட்டு மனைவியை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். திரும்பி வந்து  பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில்  இருந்த ஒன்பது பவுன் தங்க நகை, ரூ.1,000 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. புகாரின் பேரில்  ஆவியூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தேனி, ஜூலை 19- தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மூன்று திட்டப் பகுதி களில் 1,223 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்  பட்டு ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் உள்ளன. மேலும் நான்கு திட்டப் பகுதிகளில் 1,104 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன.  இந்தத் திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகள் அந்தந்த நகராட்சிக்குட்பட்ட அரசுக்குச் சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான புறம்  போக்கு பகுதிகளில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பா ளர்களை மறுகுடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  மேலும், நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கும், பொரு ளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் வீடுகள்  ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வீடுகளை அரசு மானியத்துடன் பயனாளிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க புதன்கிழமை முதல் வருகிற 23-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.  இந்த முகாம்கள் தேனி தாலுகா அலுவலகம், சின்ன மனூர், போடி, கூடலூர் நகராட்சி அலுவலகங்கள் ஆகிய  இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி  வரை நடைபெறுகிறது. முகாமில் அடுக்குமாடி குடி யிருப்பு தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடோ, வீட்டு மனையோ இருக்கக்கூடாது. மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பங்களிப்பு தொகையை செலுத்துவதற்கான சம்மதக் கடிதம் இணைக்க வேண்டும். விண்ணப்பதாரர் முன்பண மாக ரூ.10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.இந்தத் தக வலை தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பாபநாசம்: நீர்வரத்து குறைந்தது

 திருநெல்வேலி, ஜூலை 19- நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை முதல் நெல்லை மாவட்ட பகுதி யில் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும்  வெகுவாக குறைந்துள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1703 கனஅடியாக தண்ணீர் வரத்து இருந்தது.  ஆனால் செவ்வாய்க்கிழமை மழை இல்லாததால் தண்ணீர் வரத்து 1159 கனஅடியாக குறைந்தது. எனினும் அணையில் இருந்து பாச னத்திற்காக 1004.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மாணவர்களுக்கு பாகுபாடின்றி சலுகைகள் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

மதுரை, ஜூலை 19- தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் முன்பு வழங்கப்பட்டது போல் பாகுபாடு இன்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் இன்றைய பணி சூழலை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டுமென்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம், மாவட்டம் முழுவதும் மூன்று கட்ட போராட்டங்களில் ஈடுபட ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். அதாவது ஜூலை 21-ஆம் தேதி மாலை மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், ஆக.13-ஆம் தேதி மாவட்டத் தலைநகரில் தர்ணா, முதல் பருவ விடுமுறையில் சென்னையில் மாநில அளவில் போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூலியை உயர்த்தி வழங்க அப்பளத் தொழிலாளர் கோரிக்கை

மதுரை, ஜூலை 19- மதுரை மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம்  பேர் அப்பள தயாரிப்பு தொழிலில் ஈடு பட்டு வருகிறார்கள். தொழிலாளர்கள் தற்போது பெற்று வரும் கூலியோடு 60 சதவீதம் கூலி உயர்வை அப்பள தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க வேண்டுமென  மதுரை மாவட்ட அப்பள தொழிலாளர் (சிஐ டியு) சங்கம் அப்பள தொழில் நிறுவனங் களை கோரியுள்ளது. கூலி உயர்வுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என் றும் வலியுறுத்தியுள்ளது.  இது தொடர்பான மனுவை அப்பள தயா ரிப்பு நிறுவனங்களிடம் மாவட்டத் தலைவர்  எம்.கரிகாலன், செயலாளர் எம்.பாலமுரு கன், பொருளாளர் எம். முருகன் ஆகியோர் செவ்வாயன்று அளித்தனர்.

கனியாமூர் சம்பவம் மக்கள் கண்காணிப்பகம் கேள்வி

மதுரை, ஜூலை 19- கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவியின் மரணத்திற்குக் காரண மானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற  சம்பவமும் வன்மையாக கண்டிக்கத்தக் கது என மக்கள் கண்காணிப்பகம் கூறி யுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மக்கள் கண்கா ணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி இறந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளி மீது  தாக்குதல் நடந்தது. மாணவி உயிரிழந்த தற்கு படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் கொடுத்த அழுத்தத்தால் மாணவி தற்  கொலை செய்து கொண்டதாகவும் அது  தொடர்பான கடிதம் மாணவியின் உற வினர்கள் முன்பு படித்துக்காட்டப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடி தத்தின் அடிப்படையில் கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக் கப்பட்ட குடும்பத்தினரை அரசு உயர் அலு வலர்கள் சந்தித்து ஆறுதல், நம்பிக்கை அளித்திருந்தால், பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தால் வன்முறை நிகழ்ந்திருக்காது. அதே நேரத்தில், மாணவியின் பெற் றோர் மாடியிலிருந்து விழுந்த தனது மக ளின் தலைப்பகுதியைத் தவிர முகம், கை,  கால் பகுதிகளில் எந்தவித காயமும் இல்லை. ஆனால், நெற்றி, கழுத்து, மார்பு,  முதுகு உள்ளிட்ட பகுதிகளில் நகக் கீறல்  காயம் மட்டும் எப்படி வந்தது? யாரால் வந்  தது? என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ள னர். மேலும் பள்ளி நிர்வாகம் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஜூலை 13-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்  கண்காணிப்பாளர், முதன்மைக் கல்வி அலு வலர், குழந்தைகள் நலக்குழு, சட்டப் பணிகள் ஆணைக்குழு, தாலுகா சட்டப்  பணிகள் குழுவினர் என்ன செய்தனர் என்பது பொதுவெளிக்கு ஏன் வரவில்லை. இப்பிரச்சனை குறித்து விசாரிக்க ஓய்வு  பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களை இணைத்து ஒரு குழு உருவாக்க வேண் டும்.