districts

திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் வழங்குக!

திண்டுக்கல், செப்.13- திண்டுக்கல் ஒன்றியப் பகுதி களில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி  கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர்  வழங்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கூறி யுள்ளனர்.  திண்டுக்கல் ஒன்றியக் கவுன் சிலர் கூட்டம் திங்களன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய  பெருந்தலைவர் ராஜா அய்யாச் சாமி தலைமை வகித்தார். வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் என்.செல்வநாயகம்  பேசும் போது, கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. 30 ஆண்டு கள் இயங்க வேண்டும். ஆனால்,  கட்டிடம் முறையாக கட்டாததால் 20 ஆண்டுகளுக்குள் கட்டடம் இடிக்  கப்பட்டது. பள்ளிக்குழந்தைகள் அமர்ந்து படிக்க போதிய கட்டட வசதி கிடையாது.  ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்  பட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்களுக்கு கழிப்  பிட வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்து தர வேண்டும். இதுவரை எத்தனை பள்ளிகள் பழுதடைந்துள்ளது. எத்தனை பள்ளிகள் இடிக்கப்பட உள்ளன. அது பற்றிய விவரம் தர வேண்டும். புதிய பள்ளி கட்டடம்  கட்ட நிதி ஒதுக்கீடு செய்யும் போது  பத்திரிக்கைகளில் உரிய விளம்ப ரம் செய்யப்படுவதில்லை. இது  தொடர்பாக ஒன்றிய கவுன்சிலர் களுக்கும் எந்த தகவலும் கொடுப்ப தில்லை.  இதேபோல், காவிரி கூட்டுக் குடி நீர் வழங்குவதில் குளறுபடி நிலவு கிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று முதல்வர்  அறிவித்துள்ளார். இப்போதும் கூட திண்டுக்கல் ஒன்றியத்தில் கள்ளிப் பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, இந்  திரா நகர், ராஜக்கபட்டி, நந்தனார் புரம், உள்ளிட்ட பல பகுதிகளில் காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக வழங்கப்பட வேண்டும். முறை வைத்து வழங்க வேண்டும்.  ஜல்ஜீவன் திட்டத்தில் ஒப்பந்  தப் பணி எடுப்பவர்கள் முழுமை யாக அந்த பணியை செய்ய வில்லை. செந்தில் மில் பின்புறம்  சட்டமன்ற உறுப்பினர் நிதியிலி ருந்து போடப்பட்ட ஆழ்துளை கிணறு இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வில்லை.  நாகப்பா நகர் ரயில் பாலம் அரு கில் ஏற்கனவே நடைமேடை இடிக்  கப்பட்டுள்ளது. உடனடியாக கட் டித்தரப்பட வேண்டும்.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட பணிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்பு  டெண்டர் எடுப்பவர்கள் வேலை செய்வதில்லை.  குறிப்பாக மகாராஜா நகரில் டெண்டர் விடப்பட்ட சாக்கடை பிரச்சனையில் ஆரம்ப கட்ட பணி கள் நடைபெறவில்லை. இது தொடர் பாக அதிகாரிகள் பதில் அளித்த போது சட்டமன்ற குழு வருகையின் போது ஏற்றுக்கொண்ட கோரிக் கையின்படி செட்டிநாயக்கன்பட்டி குளத்தில் சுற்றுச்சுவர் அமைத்து நடைபாதை, மின்விளக்கு அமைத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.  இதே போல் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஜீவாநந்தினி பேசும்  போது, ‘‘தோமையார்புரத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் கழிப் பறை, குடிநீர்  வசதி இல்லை. அங்  கன்வாடியிலும் இதே நிலைதான்.  மேலும் இப்பகுதியில் குடியி ருப்பவர்களுக்கு சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் பைப் லைன்  வசதி இல்லை. இதே போல் பள்ள பட்டி ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ளது. அந்தோணியார் தெருவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்’’ என்றார்.  இதற்கு பதில் அளித்த அதிகாரி கள், காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம்  கொண்டு வர எஸ்டிமேட் போடப்  பட்டுள்ளது. விரைவில் தோமை யார்புரம், பள்ளப்பட்டி பைப் லைன் போட்டு தருகிறோம். அந் தோணியார் தெருவில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக ஒரு லட்சம்  லிட்டர் கொள்ளவுள்ள கீழ்நிலைத் தொட்டி அமைத்து தருகிறோம். ஆழ்துளை கிணற்றையும் அமைத்து தருகிறோம் என்று அதி காரிகள் உறுதியளித்தனர்.