சின்னாளப்பட்டி, நவ.9- சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சி வல்லம்பட்டியிருந்து வலசு கிரா மம் வரை பேருந்து வசதியை நீட்டித்திடக் கோரி மனு அளித்தும் இதுவரை பேருந்து இயக்காததை கண்டித்து புதனன்று வாலி பர், மாணவர் சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், வி.ஏ.ஓ செல்வம், காவல் ஆய்வாளர் ஜோதிமுருகன், சார்பு ஆய்வா ளர் அங்கமுத்து ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், நவம்பர் 14 அன்று போக்கு வரத்து கழக அதிகாரிகளோடு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து, பேருந்து இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளித்தனர். இதை யடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டத் தலைவர் சிலம்பரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தீபக்ராஜ், மாவட்டத் தலைவர் முகேஷ் உட்பட பலர் பங்கேற்ற னர்.