districts

img

பட்டா கோரி பழனியில் போராட்டம்

பழனி, ஆக.17-  திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றி யத்தில் சி.வேலம்பட்டி, பருத்தியூர், தொப்பம்பட்டி, தும்பலப்பட்டி, மானூர், கோரிக்கடவு, பெரிச்சிபாளை யம் உட்பட பல கிராமங்களுக்கு வீட்டுமனைப் பட்டா  வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பழனிச்சாமி தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.கனகு துவக்கி வைத்தார்.  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம சாமி ஆதரித்துப் பேசினார். சங்க மாவட்டச் செய லாளர் கே.அருள்செல்வன் நிறைவுரையாற்றினார்.  செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் பட்டா வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதி  அளித்தார். இதையேற்று போராட்டம் ஒத்தி வைக் கப்பட்டுள்ளது.