districts

img

100 நாள் வேலை கோரி முதுகுளத்தூரில் போராட்டம்

இராமநாதபுரம், ஜூன் 13- இராமநாதபுரம் மாவட்டம், முது குளத்தூர் பேரூராட்சியில் நகர்ப்புற ஏழை களுக்கு  100 நாள் வேலைவாய்ப்பு வழங்க  வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு கோரிக்கை மனு கொடுக்  கும் பெருந்திரள் போராட்டம் நடைபெற் றது. போராட்டத்திற்கு தாலுகா தலைவர் சண்முகையா தலைமை வகித்தார். மாநி லப் பொருளாளர் சங்கர், மாவட்ட தலை வர் என்.கலையரசன் ,மாவட்ட செயலா ளர் கே.கணேசன்,  தாலுகா நிர்வாகி அங்கு தன், சிபிஎம் தாலுகா செயலாளர் வி. முரு கன் ஆகியோர் பேசினர்.  பின்னர் முதுகுளத்தூர் துணை வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி செயல்  அலுவலருக்காக அலுவலக பணியாளரி டம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். இப்போராட்டத்தில் 300 பெண்கள் உள்பட  500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.