districts

மாற்றுத் திறனாளி பள்ளிகள், காப்பகங்கள் ஆய்வு கோரி போராட்டம்

விருதுநகர், செப்.19- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயிலும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ஆர்.டி.ஓ தலைமையிலும், 2 மாதங்க ளுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். விருதுநகர் மாவட் டத்தில் மாற்றுத் திறனாளி நல அலு வலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.  விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத் திற னாளிகள் கண்காணிப்புக் குழுவை அமைத்து 6 மாதங்களுக்கு ஒருமுறை  கூட்டம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.நாகராஜ் தலைமை யேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கே.ஆரோக்கியராஜ், மாநில செயலா ளர் பி.ஜீவா, மாவட்டத் தலைவர் நட ராஜன், மாவட்டப் பொருளாளர் பி. அன்புச்செல்வன், துணைத் தலை வர்கள் ஸ்ரீதேவி, அய்யக்காள் ஆகி யோர் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.