districts

img

மணிப்பூர் பாஜக அரசு பதவி விலகக் கோரி போராட்டம்

அருப்புக்கோட்டை, ஜூலை 29- மணிப்பூரில் பெண்கள் மீதான வன முறைக்கு காரணமான பாஜக அரசு உட னடியாக பதவி விலகக்கோரியும் கலவரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய-மாநில பாஜக அரசு களைக் கண்டித்தும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளை யம்பட்டியில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் தலை மையேற்றார். ஒன்றியப் பொருளாலர் ஏ. ராம லட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை துவக்கி வைத்தார். மாநிலப் பொதுச் செயலா ளர் ஏ.அமிர்தலிங்கம் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில், மாவட்டத் துணைத் தலை வர் ராஜேந்திரன்,விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் காமாட்சிநாதன், திருச்சுழி ஒன் றிய நிர்வாகிகள் பெருமாள். பூமிநாதன். சிபிஎம் ஒன்றிய செயலாளர் மார்கண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆறுச்சாமி தலைமை வகித்தார். விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச்செயலாளர் கே.அருள் செல்வன், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் எம்.கருணாகரன், ஒன்றியச்செயலாளர் மனோ கரன், சிபிஎம் ஒன்றியச்செயலாளர் சிவமணி,  சிஐடியு அமைப்பாளர் எம். முருகேசன், விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் பி.முருகேசன், நாகேஸ்வரன், ரபீக், சுமதி ஆகி யோர் கலந்து கொண்டனர்.  சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பாப்பாத்தி தலைமை வகித்தார்.  ஒன்றிய செயலாளர் எஸ். வெள்ளைக்கண்ணன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ராஜா, சீனிவாசன் சின்னராஜ் ஆகியோர் பேசினர். தாடிக்கொம்பு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் என்.பாண்டியன் தலைமை வகித் தார். மாதர் சங்க ஒன்றியத்தலைவர் பாக்கியம்  வரவேற்றார். சிஐடியு மாவட்;டச்செயலாளர் கே. பிரபாகரன், விவசாயிகள் சங்க மாவட்டத்தலை வர் என்.பெருமாள், வாலிபர் சங்க மாவட் டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாதர் சங்க  மாவட்டச்செயலாளர் வே.பாப்பாத்தி, மாணவர்  சங்க மாவட்டத்தலைவர் ஏ.கே.முகேஷ், ஆகி யோர் பேசினர். வேடசந்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நாகவேல் (சிஐடியு) தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச்செயலாளர் கே. பிரபாகரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் கே.அருள்செல்வன், விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் ராம சாமி ஆகியோர் உரையாற்றினர். விவசா யத்தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் டி.பி.முருகன், பொருளாளர் சென்னியப்பன், சிபிஎம் ஒன்றியச்செயலாளர் எம்.பெரியசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்  வாடி ஊழியர்களும் பங்கேற்றனர்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் 

விருதுநகரில் ஏஐபிடிபிஏ, பிஎஸ்என் எல்இயு, ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் புளுகாண்டி தலைமை தாங்கினார். பிஎஸ்என்ல்இயு மாவட்ட செய லாளர் குருசாமி துவக்கி வைத்து பேசினார். மாநில உதவித் தலைவர் சமுத்திரக்கனி கண்டன உரையாற்றினார். மேலும் இதில், ஏஐபிடிபிஏ மாநில உதவித்  தலைவர் எம், பெருமாள்சாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.