districts

img

விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல் சிப்காட்டிற்கு நிலம் எடுக்காதே!

விருதுநகர், ஜூன்.9- விருதுநகர் மாவட்ட விவசாயி களிடம் கருத்தைக் கேட்காமல் சிப்காட் அமைக்க நிலம் கையகப் படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள அகத்தா குளம், நத்தகுளம், முத்தனேரி, குருந்தன்குளம், நல்லதரை ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயி களின் நிலங்களை சிப்காட்டிற்கு எடுக்கக் கூடாது. 1997 இல் நில எடுப்புச் சட்டப்படி நிலத்தை கைய கப்படுத்தக் கூடாது. விவசாயிக ளின் கருத்தைக் கேட்காமல் தொழிற்சாலைகளை துவங்குவ தை கைவிட வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு ஆர்.பெருமாள், ராஜ்குமார், சுப்பையா, நீலமேகம் ஆகியோர் தலைமையேற்றனர். மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் உரையாற்றினார். மேலும் இதில் மாவட்டத் தலை வர் அ.விஜயமுருகன், மாவட்ட செயலாளர் வி.முருகன், மாவட்ட பொருளாளர் எஸ்.மனோஜ்குமார், மலைராஜ், முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

;