சாத்தூர், ஜூன் 18- திருச்சி மாவட்டம் காட்டூர் அரியமங்கலம் பகுதி யின் இந்திய ஜனநாயக வாலி பர் சங்க கிளைச் செயலா ளர் தவ்பிக் மீது கஞ்சா விற் கும் பாஜகவைச் சேர்ந்த விநோத் உள்ளிட்டோர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டித்தும், குற்றவாளி களை கைது செய்ய வலி யுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர் வடக்குரத வீதி யில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு நகரத் தலைவர் சண்முகமுனீஸ்வ ரன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், மாவட்டத் தலை வர் கே.கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோ பிரியா ஆகியோர் பேசினர். மேலும் இதில் நகரச் செய லாளர் முத்துகணேஷ், ஒன்றி யச் செயலாளர் வீர அருண்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.